FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, July 1, 2016

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வித் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

30.06.2016, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊர்வலம் கோவை கணபதி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமையில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, ஹரிபிரியா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்தத் திட்டமானது பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடுகள், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வித் திறன் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உபகரணங்கள், கல்வி உதவித் தொகைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் இடைநிலைக் கல்வியைப் பயின்றுவிட்டால் அதன் பிறகு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment