FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, July 1, 2016

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வித் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

30.06.2016, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊர்வலம் கோவை கணபதி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமையில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, ஹரிபிரியா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்தத் திட்டமானது பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடுகள், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வித் திறன் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உபகரணங்கள், கல்வி உதவித் தொகைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் இடைநிலைக் கல்வியைப் பயின்றுவிட்டால் அதன் பிறகு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment