FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 1, 2016

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வித் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

30.06.2016, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊர்வலம் கோவை கணபதி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமையில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, ஹரிபிரியா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்தத் திட்டமானது பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடுகள், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வித் திறன் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உபகரணங்கள், கல்வி உதவித் தொகைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் இடைநிலைக் கல்வியைப் பயின்றுவிட்டால் அதன் பிறகு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment