FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 1, 2016

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வித் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

30.06.2016, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊர்வலம் கோவை கணபதி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமையில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, ஹரிபிரியா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்தத் திட்டமானது பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடுகள், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வித் திறன் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உபகரணங்கள், கல்வி உதவித் தொகைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் இடைநிலைக் கல்வியைப் பயின்றுவிட்டால் அதன் பிறகு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment