FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 1, 2016

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி என்பதால் ஒருவர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

30.06.2016, புதுடெல்லி : குப்பை கொட்டச் சென்ற 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குப்பை தொட்டி அருகே வைத்து பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, போக்சோ சட்டத்தின்படி 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பின்னர், தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தாஅறிவித்தார். தீர்ப்பில் குப்தா கூறியதாவது: தனக்கு நேர்ந்த கொடுமையை மாற்றுத்திறனாளி சிறுமி, சைகையாலும், வரைபடங்களாலும் விளக்கிக் கூறிய விவரங்களே இந்த வழக்கில் நம்பகத்தன்மைக்கு போதுமானது. பொதுவாக மாற்றுத்திறனாளிகளால் ஒரு வரையறைக்கு உட்பட்டுதான் பேச முடியும்.

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் சைகையின் மூலம் பதில் அளிக்கின்றனர். ஒரு சிலர் படமாக வரைந்து காண்பிக்கின்றனர். கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படமாக வரைந்து காண்பிப்பது என்பதும் அவர்களுக்கு கடினமானது. அதுபோல, சைகையாலும் போதுமான விளக்கம் அளிக்க அவர்களால் முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் திறமை அல்லது நம்பகத்தன்மையை குறைத்து எடை போடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் விசாரணை என்ற பெயரில், தேவையில்லாத கேள்விகள் கேட்கப்படுவதை நீதிபதி கட்டுப்படுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளியிடம் அவர்களின் தகுதியை கணக்கில் கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment