FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, July 1, 2016

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி என்பதால் ஒருவர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

30.06.2016, புதுடெல்லி : குப்பை கொட்டச் சென்ற 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குப்பை தொட்டி அருகே வைத்து பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, போக்சோ சட்டத்தின்படி 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பின்னர், தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தாஅறிவித்தார். தீர்ப்பில் குப்தா கூறியதாவது: தனக்கு நேர்ந்த கொடுமையை மாற்றுத்திறனாளி சிறுமி, சைகையாலும், வரைபடங்களாலும் விளக்கிக் கூறிய விவரங்களே இந்த வழக்கில் நம்பகத்தன்மைக்கு போதுமானது. பொதுவாக மாற்றுத்திறனாளிகளால் ஒரு வரையறைக்கு உட்பட்டுதான் பேச முடியும்.

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் சைகையின் மூலம் பதில் அளிக்கின்றனர். ஒரு சிலர் படமாக வரைந்து காண்பிக்கின்றனர். கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படமாக வரைந்து காண்பிப்பது என்பதும் அவர்களுக்கு கடினமானது. அதுபோல, சைகையாலும் போதுமான விளக்கம் அளிக்க அவர்களால் முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் திறமை அல்லது நம்பகத்தன்மையை குறைத்து எடை போடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் விசாரணை என்ற பெயரில், தேவையில்லாத கேள்விகள் கேட்கப்படுவதை நீதிபதி கட்டுப்படுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளியிடம் அவர்களின் தகுதியை கணக்கில் கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment