FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 1, 2016

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி என்பதால் ஒருவர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

30.06.2016, புதுடெல்லி : குப்பை கொட்டச் சென்ற 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குப்பை தொட்டி அருகே வைத்து பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, போக்சோ சட்டத்தின்படி 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பின்னர், தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தாஅறிவித்தார். தீர்ப்பில் குப்தா கூறியதாவது: தனக்கு நேர்ந்த கொடுமையை மாற்றுத்திறனாளி சிறுமி, சைகையாலும், வரைபடங்களாலும் விளக்கிக் கூறிய விவரங்களே இந்த வழக்கில் நம்பகத்தன்மைக்கு போதுமானது. பொதுவாக மாற்றுத்திறனாளிகளால் ஒரு வரையறைக்கு உட்பட்டுதான் பேச முடியும்.

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் சைகையின் மூலம் பதில் அளிக்கின்றனர். ஒரு சிலர் படமாக வரைந்து காண்பிக்கின்றனர். கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படமாக வரைந்து காண்பிப்பது என்பதும் அவர்களுக்கு கடினமானது. அதுபோல, சைகையாலும் போதுமான விளக்கம் அளிக்க அவர்களால் முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் திறமை அல்லது நம்பகத்தன்மையை குறைத்து எடை போடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் விசாரணை என்ற பெயரில், தேவையில்லாத கேள்விகள் கேட்கப்படுவதை நீதிபதி கட்டுப்படுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளியிடம் அவர்களின் தகுதியை கணக்கில் கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment