FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 1, 2016

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி என்பதால் ஒருவர் மீது நம்பகத்தன்மையை இழந்துவிடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

30.06.2016, புதுடெல்லி : குப்பை கொட்டச் சென்ற 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குப்பை தொட்டி அருகே வைத்து பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, போக்சோ சட்டத்தின்படி 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பின்னர், தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தாஅறிவித்தார். தீர்ப்பில் குப்தா கூறியதாவது: தனக்கு நேர்ந்த கொடுமையை மாற்றுத்திறனாளி சிறுமி, சைகையாலும், வரைபடங்களாலும் விளக்கிக் கூறிய விவரங்களே இந்த வழக்கில் நம்பகத்தன்மைக்கு போதுமானது. பொதுவாக மாற்றுத்திறனாளிகளால் ஒரு வரையறைக்கு உட்பட்டுதான் பேச முடியும்.

காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் சைகையின் மூலம் பதில் அளிக்கின்றனர். ஒரு சிலர் படமாக வரைந்து காண்பிக்கின்றனர். கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் படமாக வரைந்து காண்பிப்பது என்பதும் அவர்களுக்கு கடினமானது. அதுபோல, சைகையாலும் போதுமான விளக்கம் அளிக்க அவர்களால் முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் திறமை அல்லது நம்பகத்தன்மையை குறைத்து எடை போடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் விசாரணை என்ற பெயரில், தேவையில்லாத கேள்விகள் கேட்கப்படுவதை நீதிபதி கட்டுப்படுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். மாற்றுத்திறனாளியிடம் அவர்களின் தகுதியை கணக்கில் கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment