FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, July 1, 2016

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி

மற்றவர்களுக்கும் சலுகை கிடைக்க முயற்சி

01.07.2016
போலியோவால் தனது 2 வயதில் இரண்டு கால்களையும் இழந்த, வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45), நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கைகளாலேயே செய்து காண் போரை பிரமிக்க வைக்கிறார். முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தில் முதுநிலை அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டு வந்தாலும், மேலும் சில சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக ரவி போராடி வருகிறார். இதை வலி யுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கார் மூலம் விழிப் புணர்வுப் பயணம் மேற் கொண்டார் ரவி, இதில், கார் ஓட்ட பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்களான கியர், கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டரை 2 கைகளால் இயக்கும் வகை யில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், கார் களுக்கு மதிப்புக் கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும். நெடுஞ் சாலைகளில் பயணிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தனது சுற் றுப்பயணத்தில் அவர் வலியுறுத்தி னார்.

இதையடுத்து, மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய ரவியின் தொடர் முயற்சியால், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லா சிறப்புச் சலுகையை இவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

விபத்து காப்பீட்டை உயர்த்த வேண்டும்

ரவி மேலும் கூறியதாவது: ‘‘பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை நீக்க வேண்டும். விபத்து காப்பீட்டுத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வழியே பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்க சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

இந்நிலையில், சுங்கக் கட்டணத்தில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment