FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, July 1, 2016

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி

மற்றவர்களுக்கும் சலுகை கிடைக்க முயற்சி

01.07.2016
போலியோவால் தனது 2 வயதில் இரண்டு கால்களையும் இழந்த, வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45), நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கைகளாலேயே செய்து காண் போரை பிரமிக்க வைக்கிறார். முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தில் முதுநிலை அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டு வந்தாலும், மேலும் சில சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக ரவி போராடி வருகிறார். இதை வலி யுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கார் மூலம் விழிப் புணர்வுப் பயணம் மேற் கொண்டார் ரவி, இதில், கார் ஓட்ட பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்களான கியர், கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டரை 2 கைகளால் இயக்கும் வகை யில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், கார் களுக்கு மதிப்புக் கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும். நெடுஞ் சாலைகளில் பயணிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தனது சுற் றுப்பயணத்தில் அவர் வலியுறுத்தி னார்.

இதையடுத்து, மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய ரவியின் தொடர் முயற்சியால், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லா சிறப்புச் சலுகையை இவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

விபத்து காப்பீட்டை உயர்த்த வேண்டும்

ரவி மேலும் கூறியதாவது: ‘‘பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை நீக்க வேண்டும். விபத்து காப்பீட்டுத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வழியே பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்க சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

இந்நிலையில், சுங்கக் கட்டணத்தில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment