FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 1, 2016

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி

மற்றவர்களுக்கும் சலுகை கிடைக்க முயற்சி

01.07.2016
போலியோவால் தனது 2 வயதில் இரண்டு கால்களையும் இழந்த, வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45), நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கைகளாலேயே செய்து காண் போரை பிரமிக்க வைக்கிறார். முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தில் முதுநிலை அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டு வந்தாலும், மேலும் சில சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக ரவி போராடி வருகிறார். இதை வலி யுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கார் மூலம் விழிப் புணர்வுப் பயணம் மேற் கொண்டார் ரவி, இதில், கார் ஓட்ட பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்களான கியர், கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டரை 2 கைகளால் இயக்கும் வகை யில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், கார் களுக்கு மதிப்புக் கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும். நெடுஞ் சாலைகளில் பயணிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தனது சுற் றுப்பயணத்தில் அவர் வலியுறுத்தி னார்.

இதையடுத்து, மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய ரவியின் தொடர் முயற்சியால், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லா சிறப்புச் சலுகையை இவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

விபத்து காப்பீட்டை உயர்த்த வேண்டும்

ரவி மேலும் கூறியதாவது: ‘‘பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை நீக்க வேண்டும். விபத்து காப்பீட்டுத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வழியே பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்க சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

இந்நிலையில், சுங்கக் கட்டணத்தில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment