FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, July 1, 2016

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி

மற்றவர்களுக்கும் சலுகை கிடைக்க முயற்சி

01.07.2016
போலியோவால் தனது 2 வயதில் இரண்டு கால்களையும் இழந்த, வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45), நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கைகளாலேயே செய்து காண் போரை பிரமிக்க வைக்கிறார். முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தில் முதுநிலை அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டு வந்தாலும், மேலும் சில சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக ரவி போராடி வருகிறார். இதை வலி யுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கார் மூலம் விழிப் புணர்வுப் பயணம் மேற் கொண்டார் ரவி, இதில், கார் ஓட்ட பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்களான கியர், கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டரை 2 கைகளால் இயக்கும் வகை யில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், கார் களுக்கு மதிப்புக் கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும். நெடுஞ் சாலைகளில் பயணிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தனது சுற் றுப்பயணத்தில் அவர் வலியுறுத்தி னார்.

இதையடுத்து, மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய ரவியின் தொடர் முயற்சியால், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லா சிறப்புச் சலுகையை இவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

விபத்து காப்பீட்டை உயர்த்த வேண்டும்

ரவி மேலும் கூறியதாவது: ‘‘பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை நீக்க வேண்டும். விபத்து காப்பீட்டுத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வழியே பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்க சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

இந்நிலையில், சுங்கக் கட்டணத்தில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment