FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 31, 2016

ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார்

28.07.2016, ஈரோடு: 
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வேத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு,   ஆன்-லைன் புக்கிங் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே அனைத்து சலுகைளையும் பெற தகுதியுடையவர் ஆகிறார். ஆனால், ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி, அனைவருக்கும் அட்டை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment