FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, July 31, 2016

ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார்

28.07.2016, ஈரோடு: 
ஈரோட்டில், மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வேத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு,   ஆன்-லைன் புக்கிங் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே அனைத்து சலுகைளையும் பெற தகுதியுடையவர் ஆகிறார். ஆனால், ஈரோடு ரயில்வே வணிக அதிகாரி முத்துகுமார், 100 சதவீத ஊனம் இருந்தால் தான், அடையாள அட்டை தருவோம் எனக்கூறி, பலரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி, அனைவருக்கும் அட்டை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கத்தின் சார்பில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment