FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 4, 2016

ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

04.07.2016
ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டையைப் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ரயில் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது. கவுன்ட்டர்கள் மட்டுமின்றி, ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதும் அவர்கள் சலுகை பெறும் விதமாக பிரத்தியேக புகைப்பட அடையாள அட்டையை ரயில்வே துறை வழங்குகிறது. இந்த அடையாள அட்டையைப் பெற முக்கியமான கோட்ட அலுவலகங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே, அடையாள அட்டை தேவைப்படுவோர் தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரத்தில் உள்ள கோட்ட அலுவலங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளருக்கு அனுப்பலாம். மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக விண்ணப்பித்தும், அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் சம்மந்தப்பட்ட கோட்ட அதிகாரியை அணுகி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment