FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, July 31, 2016

தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழில் தனி வலைதளம்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்மாதிரி முயற்சி

29.07.2016, மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான அரசின் சலுகைகளை எளிதில் பெறும் வகையில், எளிய தமிழில் வலைதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது மாற்றுத்திறனாளிகள் துறையின் விழுப்புரம் மாவட்டப் பிரிவு.

மனதளவில் ஊனமாக இருக்கும் பலருக்கு மத்தியில் உடலளவில் மட்டும் ஊனம் சுமப்பவர்கள் மாற்றுத்திறனாளிகள். அக்கறை யும், சரியான வழிகாட்டுதலும் சமூகத்தில் இருந்து கிடைக்கத் தொடங்கியிருப்பதால் இவர்க ளும் சக மனிதர்களைபோல் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை என யுனெஸ்கோ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் உள்ள அனைத்து அரசுகளுமே மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கியிருக்கிற காலம் இது. தமிழக அரசும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல், இலவச கணினி பயிற்சி, செல்போன் பயிற்சி, கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள், கல்வி உதவித் தொகை, காதொலி கருவிகள் மற்றும் சூரிய ஒளியி னால் மின்சக்தி பெறும் பேட்டரிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாற்றுத்திறனாளி களுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தையும் தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார் . இந்த சிறப்பு வாகனங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில், இயன் மு றைச் சிகிச்சை கருவிகளோடு செயல்திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பிறந்த குழந்தைகளைப் பரிசோதனை செய்தல், ஆரம்ப நிலையில் குறைகளைக் கண்ட றிதல், உதவி உபகரணங்களுக் கான மதிப்பீடு செய்தல், பயிற்சி அளித்தல், அனைத்து வகையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக் கும் விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கு தேவையான நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனம் மூலம் தற்போது, 6 வயது வரையிலான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இயன்முறைப் பயிற்சி, காது கேளாதவர்களுக்கான பேச்சுப் பயிற்சி, முடநீக்கியல் சாதனங்க ளுக்கான மதிப்பீடு ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

இந்த தகவல்களையெல்லாம் ஒன்று திரட்டி மாற்றுத்திறனாளிகள் அறியும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தனி வலைதளம் ஒன்றை எளிய தமிழில் உருவாக் கியுள்ளனர்.

மாவட்ட அலுவலர் விளக்கம்

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் நாத் கூறும்போது, “விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரம் மாற்றுத் தி றனாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் படிக்கத் தெரியுமே தவிர எழுதத் தெரியாது. அவர்கள் எளிதில் அரசின் சலுகைகளை அறிந்து கொள்ள ஏதுவாக தமிழில் வலை தளத்தை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் அரசின் நலத்திட்டங் களை அறிந்துகொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான விண் ணப்பங்களையும் தமிழிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்கிறார்

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த இணையதளத்தை அடைய, விழுப்புரம் மாவட்ட அரசுத் துறை இணையதளத்தினுள் viluppuram.tn.nic.in சென்றால் District Differently Abled Welfare Office தொடர்பை கிளிக் செய்தால் மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்கள் தமிழில் இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மற்ற துறைகளின் விவரங்கள் எதுவும் தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment