FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, July 24, 2016

பணி மாறுதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

24.07.2016
ஆத்தூர்: ''தொடக்க, நடுநிலை பள்ளிகளில், உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, காலி பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில், 23 ஆயிரத்து, 815 தொடக்கப்பள்ளிகள், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு, பணி நிரவல் செய்ய வேண்டும். அந்த பணி நிரவல் முறைகளில் பின்பற்றும் வழிமுறை குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2015, செப்., 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கைகளின்படி, உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியிட தேவைக்கேற்ப பணி மாறுதல் செய்தல் வேண்டும். கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில், அந்தந்த ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும்போது, பள்ளியில் சேர்ந்த தேதியின்படி, இளையவரை பணி நிரவல் ஆசிரியராக நிர்ணயிக்க வேண்டும். உபரி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின், அவர்களை, அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி, பணி நிரவல் செய்ய வேண்டும். ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுகளை, அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். கண்பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள், விதவைகள், 40 வயதை கடந்து திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதிப்பு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு, பணியிட மாறுதலில் முன்னுரிமை வழங்கலாம். பார்வை இல்லாதவர், மாற்றுத்திறனாளிகள், தான் பணிபுரியும் இடத்திலேயே பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். காலி பணியிடத்துக்கு நிரவல் செய்யும்போது, அதில் செல்லும் உபரி ஆசிரியர் பணியிடத்தினை, இயக்கக தொகுப்பு சரண் செய்ய வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை, நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment