FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, July 24, 2016

பணி மாறுதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

24.07.2016
ஆத்தூர்: ''தொடக்க, நடுநிலை பள்ளிகளில், உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, காலி பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில், 23 ஆயிரத்து, 815 தொடக்கப்பள்ளிகள், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு, பணி நிரவல் செய்ய வேண்டும். அந்த பணி நிரவல் முறைகளில் பின்பற்றும் வழிமுறை குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2015, செப்., 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கைகளின்படி, உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியிட தேவைக்கேற்ப பணி மாறுதல் செய்தல் வேண்டும். கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில், அந்தந்த ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும்போது, பள்ளியில் சேர்ந்த தேதியின்படி, இளையவரை பணி நிரவல் ஆசிரியராக நிர்ணயிக்க வேண்டும். உபரி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின், அவர்களை, அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி, பணி நிரவல் செய்ய வேண்டும். ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுகளை, அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். கண்பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள், விதவைகள், 40 வயதை கடந்து திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதிப்பு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு, பணியிட மாறுதலில் முன்னுரிமை வழங்கலாம். பார்வை இல்லாதவர், மாற்றுத்திறனாளிகள், தான் பணிபுரியும் இடத்திலேயே பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். காலி பணியிடத்துக்கு நிரவல் செய்யும்போது, அதில் செல்லும் உபரி ஆசிரியர் பணியிடத்தினை, இயக்கக தொகுப்பு சரண் செய்ய வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை, நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment