FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, July 24, 2016

பணி மாறுதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

24.07.2016
ஆத்தூர்: ''தொடக்க, நடுநிலை பள்ளிகளில், உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, காலி பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில், 23 ஆயிரத்து, 815 தொடக்கப்பள்ளிகள், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு, பணி நிரவல் செய்ய வேண்டும். அந்த பணி நிரவல் முறைகளில் பின்பற்றும் வழிமுறை குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2015, செப்., 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கைகளின்படி, உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியிட தேவைக்கேற்ப பணி மாறுதல் செய்தல் வேண்டும். கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில், அந்தந்த ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும்போது, பள்ளியில் சேர்ந்த தேதியின்படி, இளையவரை பணி நிரவல் ஆசிரியராக நிர்ணயிக்க வேண்டும். உபரி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின், அவர்களை, அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி, பணி நிரவல் செய்ய வேண்டும். ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுகளை, அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். கண்பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள், விதவைகள், 40 வயதை கடந்து திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதிப்பு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு, பணியிட மாறுதலில் முன்னுரிமை வழங்கலாம். பார்வை இல்லாதவர், மாற்றுத்திறனாளிகள், தான் பணிபுரியும் இடத்திலேயே பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். காலி பணியிடத்துக்கு நிரவல் செய்யும்போது, அதில் செல்லும் உபரி ஆசிரியர் பணியிடத்தினை, இயக்கக தொகுப்பு சரண் செய்ய வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை, நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment