FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 24, 2016

பணி மாறுதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

24.07.2016
ஆத்தூர்: ''தொடக்க, நடுநிலை பள்ளிகளில், உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, காலி பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில், 23 ஆயிரத்து, 815 தொடக்கப்பள்ளிகள், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு, பணி நிரவல் செய்ய வேண்டும். அந்த பணி நிரவல் முறைகளில் பின்பற்றும் வழிமுறை குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2015, செப்., 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கைகளின்படி, உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியிட தேவைக்கேற்ப பணி மாறுதல் செய்தல் வேண்டும். கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில், அந்தந்த ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும்போது, பள்ளியில் சேர்ந்த தேதியின்படி, இளையவரை பணி நிரவல் ஆசிரியராக நிர்ணயிக்க வேண்டும். உபரி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின், அவர்களை, அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி, பணி நிரவல் செய்ய வேண்டும். ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுகளை, அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். கண்பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள், விதவைகள், 40 வயதை கடந்து திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதிப்பு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு, பணியிட மாறுதலில் முன்னுரிமை வழங்கலாம். பார்வை இல்லாதவர், மாற்றுத்திறனாளிகள், தான் பணிபுரியும் இடத்திலேயே பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். காலி பணியிடத்துக்கு நிரவல் செய்யும்போது, அதில் செல்லும் உபரி ஆசிரியர் பணியிடத்தினை, இயக்கக தொகுப்பு சரண் செய்ய வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை, நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment