FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, July 22, 2016

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


கடலூர்,21 July 2016

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் (பொ) கோ.விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளி பதிவுதாரர்களுக்கு ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டு உதவித் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை கல்வித் தகுதிக்கு ரூ.750-ம், பட்டப் படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
எனவே, பதிவுதாரர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 வயது, மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவராகவோ, கல்வி நிலையத்தில் படித்துக் கொண்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது. கல்வியினை தமிழ் நாட்டிலேயே பயின்றவராக இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டவர்கள் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment