FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, July 22, 2016

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


கடலூர்,21 July 2016

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் (பொ) கோ.விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளி பதிவுதாரர்களுக்கு ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டு உதவித் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை கல்வித் தகுதிக்கு ரூ.750-ம், பட்டப் படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
எனவே, பதிவுதாரர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 வயது, மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவராகவோ, கல்வி நிலையத்தில் படித்துக் கொண்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது. கல்வியினை தமிழ் நாட்டிலேயே பயின்றவராக இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டவர்கள் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment