FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 16, 2016

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

11.07.2016
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் அறம் செய் மற்றும் தூய்மை விழிகள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜபுரம் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ரா.பரமேஸ்வரி மற்றும் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.வித்யாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் அனைத்துவகை மாற்றுத்திறன் மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லியோனார்ட் காதுகேளாதோர் பள்ளி மாணவர் முகமதுசுகைபி முதலிடம் பிடித்தார். ஒய்எம்சிஏ பள்ளி மாணவர் மகேஸ்வரன் இரண்டாமிடம் பிடித்தார். மேலும், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சுதீஷ்குமார், பெண்கள் பிரிவில் வீரலட்சுமியும் முதலிடம் பிடித்தனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 140 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்.கருணாநிதி, மதுரைக் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் இல.அமுதன், தொழிலதிபர் முத்துகுமரன், சித்திவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறம் செய் அமைப்பின் பாலாஜி மற்றும் இறையருள்மன்றம் கார்த்திகேயன், பரமசிவம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக, தூய்மை விழிகள் அமைப்பின் இயக்குநர் பி.வேல்முருகன் வரவேற்றார். இறுதியாக அறம்செய் இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.குருராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment