FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, July 16, 2016

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

11.07.2016
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் அறம் செய் மற்றும் தூய்மை விழிகள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜபுரம் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ரா.பரமேஸ்வரி மற்றும் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.வித்யாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் அனைத்துவகை மாற்றுத்திறன் மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லியோனார்ட் காதுகேளாதோர் பள்ளி மாணவர் முகமதுசுகைபி முதலிடம் பிடித்தார். ஒய்எம்சிஏ பள்ளி மாணவர் மகேஸ்வரன் இரண்டாமிடம் பிடித்தார். மேலும், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சுதீஷ்குமார், பெண்கள் பிரிவில் வீரலட்சுமியும் முதலிடம் பிடித்தனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 140 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்.கருணாநிதி, மதுரைக் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் இல.அமுதன், தொழிலதிபர் முத்துகுமரன், சித்திவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறம் செய் அமைப்பின் பாலாஜி மற்றும் இறையருள்மன்றம் கார்த்திகேயன், பரமசிவம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக, தூய்மை விழிகள் அமைப்பின் இயக்குநர் பி.வேல்முருகன் வரவேற்றார். இறுதியாக அறம்செய் இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.குருராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment