FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, July 16, 2016

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

11.07.2016
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் அறம் செய் மற்றும் தூய்மை விழிகள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜபுரம் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ரா.பரமேஸ்வரி மற்றும் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.வித்யாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் அனைத்துவகை மாற்றுத்திறன் மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லியோனார்ட் காதுகேளாதோர் பள்ளி மாணவர் முகமதுசுகைபி முதலிடம் பிடித்தார். ஒய்எம்சிஏ பள்ளி மாணவர் மகேஸ்வரன் இரண்டாமிடம் பிடித்தார். மேலும், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சுதீஷ்குமார், பெண்கள் பிரிவில் வீரலட்சுமியும் முதலிடம் பிடித்தனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 140 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்.கருணாநிதி, மதுரைக் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் இல.அமுதன், தொழிலதிபர் முத்துகுமரன், சித்திவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறம் செய் அமைப்பின் பாலாஜி மற்றும் இறையருள்மன்றம் கார்த்திகேயன், பரமசிவம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக, தூய்மை விழிகள் அமைப்பின் இயக்குநர் பி.வேல்முருகன் வரவேற்றார். இறுதியாக அறம்செய் இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.குருராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment