FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, July 16, 2016

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

11.07.2016
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் அறம் செய் மற்றும் தூய்மை விழிகள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜபுரம் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி இயக்குநர் ரா.பரமேஸ்வரி மற்றும் டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.வித்யாவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் அனைத்துவகை மாற்றுத்திறன் மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் 8 ஆம் வகுப்பு வரையிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லியோனார்ட் காதுகேளாதோர் பள்ளி மாணவர் முகமதுசுகைபி முதலிடம் பிடித்தார். ஒய்எம்சிஏ பள்ளி மாணவர் மகேஸ்வரன் இரண்டாமிடம் பிடித்தார். மேலும், 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சுதீஷ்குமார், பெண்கள் பிரிவில் வீரலட்சுமியும் முதலிடம் பிடித்தனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 140 மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்குரைஞர் எஸ்.கருணாநிதி, மதுரைக் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் இல.அமுதன், தொழிலதிபர் முத்துகுமரன், சித்திவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறம் செய் அமைப்பின் பாலாஜி மற்றும் இறையருள்மன்றம் கார்த்திகேயன், பரமசிவம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக, தூய்மை விழிகள் அமைப்பின் இயக்குநர் பி.வேல்முருகன் வரவேற்றார். இறுதியாக அறம்செய் இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.குருராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment