FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, July 16, 2016

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

11.07.2016
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி 10 இடங்களில் நடைபெறவுள்ளது.

சென்னை ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை கடந்த 7 ஆண்டுகளாக மாற்றுத்திறனுடையோருக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்து வைக்கிறது.

இதுவரை 256 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி சென்னையில் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 10 இடங்களில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வோருக்கு ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் கிடையாது. தம்பதியரில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனுடையோராக இருக்க வேண்டும்.

இதில் கலந்துகொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்போரிடம் அக்டோபர் 16-ஆம் தேதி மருத்துவம், சட்ட ரீதியான ஆலோசனைகள் நடத்தப்படும்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் தம்பதிகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி சென்னை கீதா பவனத்தில் திருமணம் செய்துவைக்கப்படும்.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், www.tndfctrust.com, www.geetabhavantrust.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிம்மச்சந்திரன், செயலர் பொன்னுசாமி, ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை அறங்காவலர்கள் எஸ்.கே.கோயங்கா, கே.கே. குப்தா, ராகேஷ்கோயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment