FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 16, 2016

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

11.07.2016
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி 10 இடங்களில் நடைபெறவுள்ளது.

சென்னை ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை கடந்த 7 ஆண்டுகளாக மாற்றுத்திறனுடையோருக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்து வைக்கிறது.

இதுவரை 256 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி சென்னையில் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 10 இடங்களில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வோருக்கு ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் கிடையாது. தம்பதியரில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனுடையோராக இருக்க வேண்டும்.

இதில் கலந்துகொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்போரிடம் அக்டோபர் 16-ஆம் தேதி மருத்துவம், சட்ட ரீதியான ஆலோசனைகள் நடத்தப்படும்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் தம்பதிகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி சென்னை கீதா பவனத்தில் திருமணம் செய்துவைக்கப்படும்.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், www.tndfctrust.com, www.geetabhavantrust.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிம்மச்சந்திரன், செயலர் பொன்னுசாமி, ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை அறங்காவலர்கள் எஸ்.கே.கோயங்கா, கே.கே. குப்தா, ராகேஷ்கோயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment