FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, July 16, 2016

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

11.07.2016
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி 10 இடங்களில் நடைபெறவுள்ளது.

சென்னை ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை கடந்த 7 ஆண்டுகளாக மாற்றுத்திறனுடையோருக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்து வைக்கிறது.

இதுவரை 256 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி சென்னையில் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 10 இடங்களில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வோருக்கு ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் கிடையாது. தம்பதியரில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனுடையோராக இருக்க வேண்டும்.

இதில் கலந்துகொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்போரிடம் அக்டோபர் 16-ஆம் தேதி மருத்துவம், சட்ட ரீதியான ஆலோசனைகள் நடத்தப்படும்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் தம்பதிகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி சென்னை கீதா பவனத்தில் திருமணம் செய்துவைக்கப்படும்.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், www.tndfctrust.com, www.geetabhavantrust.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிம்மச்சந்திரன், செயலர் பொன்னுசாமி, ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை அறங்காவலர்கள் எஸ்.கே.கோயங்கா, கே.கே. குப்தா, ராகேஷ்கோயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment