FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, July 16, 2016

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம்: விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

11.07.2016
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி 10 இடங்களில் நடைபெறவுள்ளது.

சென்னை ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை கடந்த 7 ஆண்டுகளாக மாற்றுத்திறனுடையோருக்கு சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்து வைக்கிறது.

இதுவரை 256 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், வரும் 24-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கி சென்னையில் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை 10 இடங்களில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வோருக்கு ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் கிடையாது. தம்பதியரில் யாரேனும் ஒருவர் மாற்றுத்திறனுடையோராக இருக்க வேண்டும்.

இதில் கலந்துகொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்போரிடம் அக்டோபர் 16-ஆம் தேதி மருத்துவம், சட்ட ரீதியான ஆலோசனைகள் நடத்தப்படும்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் தம்பதிகளுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி சென்னை கீதா பவனத்தில் திருமணம் செய்துவைக்கப்படும்.

இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், www.tndfctrust.com, www.geetabhavantrust.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

அப்போது, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிம்மச்சந்திரன், செயலர் பொன்னுசாமி, ஸ்ரீகீதாபவன் அறக்கட்டளை அறங்காவலர்கள் எஸ்.கே.கோயங்கா, கே.கே. குப்தா, ராகேஷ்கோயல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment