FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, July 22, 2016

லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி


20.07.2016
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், அரசு பணியில் சேர அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு பதவிமூப்பு அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பகத்தில் இருந்து கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்துள்ளது.

அவர் நேரில் சென்று அதற்கான அனைத்து ஆவணங்களையும் சம்ர்ப்பித்துவிட்டு வந்துள்ளார். ஆனால் அது தொடர்பாக அவருக்கு எந்த பணி ஆணைக் கடிதமும் வரவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக அதே பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்து, மீண்டும் சான்றிதழ்களை சமர்பித்துள்ளார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று மூன்று லட்சம் பணம் கொடுத்தால் இந்த வேலை உனக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம், இல்லையென்றால் வேறு யாருக்காவது வழங்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

பொன்னுசாமியும் அவரது தந்தையும் எங்களால் இவ்வளவு பெரிய தொகை கொடுக்க இயலாது என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கடன் வாங்கியாவது கொடுங்கள், ஒரே வருடத்தில் நீங்கள் சம்பாதித்து விடலாம் என்றும் பிச்சை எடுத்தாவது எங்களுக்குப் பணம் கொடு இல்லை என்றால் இந்த வேலை உனக்கு இல்லை என்று கூறியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசயில் பிச்சை எடுக்க அம்ர்ந்த பொண்ணூசாமி, பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளுக்கு பணத்தைக் கொடுத்துவிடலாம் என்றுதான் பிச்சை எடுக்க அமர்ந்தேன் என்றும் ஆனால் காவல்துறையினர் என்னை ஆட்சியரை சந்தித்து முறையிடக் கூட விடாமல் மிரட்டுகிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

No comments:

Post a Comment