FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, July 16, 2016

ஜூலை 24-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவரம்

 14.07.2016
திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சோழ மண்டல மாற்றுத் திறனாளிகள் சுயவரம் நிகழ்ச்சி ஜூலை 24-ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை கீதாபவன் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்படும் சுயவரம் நிகழ்ச்சி, மன்னார்குடி பந்தலடி வடபுறம், காந்திஜிசாலையில் உள்ள ஏ.எஸ்.ஏ.மஜீது கல்யாண மஹாலில் ஜூலை 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

சுயவரம் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் என இருபாலரும் கலந்துகொள்ளலாம். மேலும் இதுகுறித்து விவரம் அறிய கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் கோ.தமிழரசனை 94867 41985, 99420 55817 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment