FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 18, 2016

மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

17.07.2016
பெரியமேடு: சென்னையில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். அதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அசோக் நகரில் உள்ள, சென்னை சோஷியல் சர்வீஸ் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'வேகம் - 2016' ஐந்தாவது, தடகள போட்டி, சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் காலை துவங்கி, மாலை வரை நடந்தது.

அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய்பேச

முடியாதோர் என, பல்வேறு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், 1,150 பேர் பங்கேற்றனர்.

குண்டு எறிதல், கோணிப்பை ஓட்டம், 100, 200 மீ., ஓட்டப் பந்தயம், மற்றவர் துணையோடு ஓடுதல், பலுான் உடைத்தல் உள்ளிட்ட, 154 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கத்துடன், சான்றிதழும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment