FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, July 18, 2016

மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்

17.07.2016
பெரியமேடு: சென்னையில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் 1,150 மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். அதில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அசோக் நகரில் உள்ள, சென்னை சோஷியல் சர்வீஸ் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'வேகம் - 2016' ஐந்தாவது, தடகள போட்டி, சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் காலை துவங்கி, மாலை வரை நடந்தது.

அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், வாய்பேச

முடியாதோர் என, பல்வேறு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், 1,150 பேர் பங்கேற்றனர்.

குண்டு எறிதல், கோணிப்பை ஓட்டம், 100, 200 மீ., ஓட்டப் பந்தயம், மற்றவர் துணையோடு ஓடுதல், பலுான் உடைத்தல் உள்ளிட்ட, 154 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கத்துடன், சான்றிதழும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment