FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, July 7, 2016

காதலியை சுட்டு கொன்ற வழக்கு : பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு ஜெயில்

07.07.2016, ஜோகன்னஸ்பர்க்: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிஸ்டோரியஸ் (29 வயது), மாற்றுத் திறனாளி தடகள வீரர். முழங்கால் மூட்டுக்கு கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கை கால்களுடன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்த அவர் ‘பிளேடு ரன்னர்’ ஆக உலகப் புகழ் பெற்றார். தனது காதலியும் மாடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்ப்புடன் வசித்து வந்த அவர், கடந்த 2013ம் ஆண்டு ரீவாவை சரமாரியாக சுட்டுக் கொன்றார். 

விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டதாக தவறாகக் கணித்து பதற்றத்தில் சுட்டுவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர். அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பட்டார். மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்தாலும், அப்பீல் செய்யப் போவதில்லை என்று பிஸ்டோரியஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment