FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, July 7, 2016

காதலியை சுட்டு கொன்ற வழக்கு : பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு ஜெயில்

07.07.2016, ஜோகன்னஸ்பர்க்: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிஸ்டோரியஸ் (29 வயது), மாற்றுத் திறனாளி தடகள வீரர். முழங்கால் மூட்டுக்கு கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கை கால்களுடன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்த அவர் ‘பிளேடு ரன்னர்’ ஆக உலகப் புகழ் பெற்றார். தனது காதலியும் மாடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்ப்புடன் வசித்து வந்த அவர், கடந்த 2013ம் ஆண்டு ரீவாவை சரமாரியாக சுட்டுக் கொன்றார். 

விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டதாக தவறாகக் கணித்து பதற்றத்தில் சுட்டுவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர். அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பட்டார். மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்தாலும், அப்பீல் செய்யப் போவதில்லை என்று பிஸ்டோரியஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment