FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, July 7, 2016

காதலியை சுட்டு கொன்ற வழக்கு : பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு ஜெயில்

07.07.2016, ஜோகன்னஸ்பர்க்: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிஸ்டோரியஸ் (29 வயது), மாற்றுத் திறனாளி தடகள வீரர். முழங்கால் மூட்டுக்கு கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கை கால்களுடன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்த அவர் ‘பிளேடு ரன்னர்’ ஆக உலகப் புகழ் பெற்றார். தனது காதலியும் மாடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்ப்புடன் வசித்து வந்த அவர், கடந்த 2013ம் ஆண்டு ரீவாவை சரமாரியாக சுட்டுக் கொன்றார். 

விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டதாக தவறாகக் கணித்து பதற்றத்தில் சுட்டுவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர். அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பட்டார். மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்தாலும், அப்பீல் செய்யப் போவதில்லை என்று பிஸ்டோரியஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment