FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, July 7, 2016

காதலியை சுட்டு கொன்ற வழக்கு : பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு ஜெயில்

07.07.2016, ஜோகன்னஸ்பர்க்: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிஸ்டோரியஸ் (29 வயது), மாற்றுத் திறனாளி தடகள வீரர். முழங்கால் மூட்டுக்கு கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கை கால்களுடன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்த அவர் ‘பிளேடு ரன்னர்’ ஆக உலகப் புகழ் பெற்றார். தனது காதலியும் மாடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்ப்புடன் வசித்து வந்த அவர், கடந்த 2013ம் ஆண்டு ரீவாவை சரமாரியாக சுட்டுக் கொன்றார். 

விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டதாக தவறாகக் கணித்து பதற்றத்தில் சுட்டுவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர். அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பட்டார். மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்தாலும், அப்பீல் செய்யப் போவதில்லை என்று பிஸ்டோரியஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment