FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, July 4, 2016

சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு

04.07.2016, சென்னை, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருதுகள், சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்காக விண்ணப்பிப்பதற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–

விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை முதல்–அமைச்சர் ஊக்குவித்து கவுரப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கும் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினவிழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தங்கப்பதக்கம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர் விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப்பணியாளருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

விண்ணப்பிக்கலாம்

இந்த விருதுகளைப்பெற, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை–78 அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், சென்னை என்ற முகவரிக்கு 12.7.16–க்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment