FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, July 4, 2016

சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு

04.07.2016, சென்னை, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருதுகள், சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்காக விண்ணப்பிப்பதற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–

விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை முதல்–அமைச்சர் ஊக்குவித்து கவுரப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கும் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினவிழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தங்கப்பதக்கம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர் விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப்பணியாளருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

விண்ணப்பிக்கலாம்

இந்த விருதுகளைப்பெற, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை–78 அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், சென்னை என்ற முகவரிக்கு 12.7.16–க்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment