FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, July 4, 2016

சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு

04.07.2016, சென்னை, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருதுகள், சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்காக விண்ணப்பிப்பதற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–

விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை முதல்–அமைச்சர் ஊக்குவித்து கவுரப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கும் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினவிழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தங்கப்பதக்கம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரத்துக்கான ரொக்கப்பரிசு, சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர் விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப்பணியாளருக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது (10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்).

விண்ணப்பிக்கலாம்

இந்த விருதுகளைப்பெற, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை–78 அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், சென்னை என்ற முகவரிக்கு 12.7.16–க்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment