FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, January 31, 2014

SOUGHT INTERVENTION OF STATE COMR FOR DISABLED IN TEACHERS RECRUITMENT

RRB RECRUITMENT 2014 APPLICATION FORM FOR ASSISTANT LOCO PILOT, TECHNICIANS (26567 VACANCIES)


Railway Recruitment Boards (RRBs under Government of Ministry of Railway) issued centralized Employment Notification for the post of Assistant Loco Pilot and Technicians for filling up 26567 Vacancies in Various Categories. RRBs official advertisement scheduled to be published on 18th January 2014. The Last date for receipt of applications is 17th February 2014.

Centralised Employment Notice No.01/2014
Category No.
Name of the Post
Total Vacancies
Age Limit
01 -139
Assistant Loco Pilot (ALP) & Technicians
26567
18 to 30 Years as on 01/07/2014

Participating RRB’s –> Ahmedabad, Ajmer, Allahabad, Bangalore, Bhopal, Bhubaneswar, Bilaspur, Chandigarh, Chennai, Gorakhpur, Guwahati, Jammu & Srinagar, Kolkata, Malda, Mumbai, Muzaffarpur, Patna, Ranchi, Secunderabad, Siliguri, Thiruvananthapuram.

Board wise Vacancies:

Assistant Loco Pilot -> Ahmadabad - 254, Ajmer - 562, Allahabad - 955, Bangalore - 917, Bhopal - 254, Bhubaneswar - 1307, BIlaspur - 1482, Chandigarh - 1138, Chennai - 283, Gorakhpur - 78, Guwahati - 284, Jammu and Srinagar - 338, Kolkata - 1087, Malda - 250, Mumbai - 2500, Muzaffarpur - 1153, Patna - 1253, Ranchi - 1863, Secunderabad - 2287, Siliguri - 187, Thiruvanathapuram - 197.

Technician -> Ahmadabad - 292, Ajmer - 209, Allahabad - 572, Bangalore - 255, Bhopal - 72, Bhubaneswar - 231, Bilaspur - 198, Chandigarh - 23, Chennai - 1383, Guwahati - 254, Jammu and Srinagar - 137, Kolkata - 951, Malda - 1655, Mumbai - 1655, Patna - 18, Ranchi - 758, Secunderabad - 554, Siliguri - 158, Thiruvanathapuram - 97.

Age Limit:
18 to 30 Years as on 1st July 2014.

Scale of Pay: Rs.5,200 - 20,200 (GP Rs.1,900)

Educational Qualifications: Matriculation (10th Class) along with course completed Act Apprenticeship / ITI approved by NCVT/ SCVT in the respective trade from recognized institute/ university.

Stage of Exam:
(i) For ALP-Single Stage Written Examination followed by Aptitude test & Verification of Original Documents.
(ii) For Technicians-Single Stage Written Examination followed by Verification of Original Documents.

Exam Fee: Rs.40/- for General/OBC Category Candidates.

How To Apply:
Applications on the prescribed format (on A-4 size bond paper of 80 GSM). Completed applications in all respects along with required enclosures should be sent to the respective RRBs by Ordinary Post Only or be dropped in the box kept for the purpose in the office of the respective RRBs within the last date 17/02/2014 up to 17.30 Hrs. (For candidates residing in Assam, Meghalaya, Manipur, Arunachal Pradesh, Mizoram, Nagaland, Tripura, Sikkim, Jammu & Kashmir, Lahaul&Spiti districts and Pangi Sub-Division ofChamba district of Himachal Pradesh, Andaman & Nicobarand Lakshadweep Islands and for candidates residing abroad, the closing date for receipt of applications by Ordinary Post will be 04/03/2014 up to 17.30 Hrs.)

Important Dates:

Date and Time of Closing Online Applications -> 17/02/2014 up to 17:30 Hrs.
Date of Written Examination -> 15/06/2014

 Click here
Detailed Notification Here>>  
Download Application Form>>

Thursday, January 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகை: கோவை கலெக்டர் வழங்கினார்

கோவை, ஜன. 29–

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பல்வேறு சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்விக் கடன், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் பெற்றுக் கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள்

கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தீத்திபாளையம் சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி ரஞ்சிதாவின குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர். முருகன், தனித் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் வெங்கடாச்சலம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சி) செல்வம், உதவி இயக்குநர் (பேரூராட்சி) திருஞானம், மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Maalaimalar

பஸ் பாஸ்: மாற்றுத் திறனாளிகள் தவிப்பு

29.01.2014, மதுரை :
பஸ் பாஸ் மற்றும் ரயில் கட்டண சலுகைக்கு, டாக்டரின் கையெழுத்து பெறுவதற்காக, மாற்றுத் திறனாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மதுரை கோச்சடையைச் சேர்ந்த பாக்கியத்தின் மகன் வாசு, 10. பிறவியிலேயே வளைந்த கால்களை உடைய இவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக சான்று உள்ளது. பஸ், ரயில்களில் பயணம் செய்வதற்கு துணையாக ஒருத்தர் உடன் செல்வதற்கான, விண்ணப்ப படிவத்தில் டாக்டர் கையெழுத்திற்காக, தாயும், மகனும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

அங்குள்ள டாக்டர், மதியம் 2 மணிக்கு மேல் கையெழுத்து இடுகிறேன் என, அனுப்பியதால், காலை 8 மணியிலிருந்து மதியம் 1.45 மணி வரை காத்திருந்தனர். அதன்பின் பணியாளர்கள் உதவியுடன், உதவி நிலைய மருத்துவ அலுவலரிடம் கையெழுத்து பெற்றனர்.

டாக்டர்கள் கூறுகையில்,''இந்த சான்றிதழில் கையெழுத்திடுவதற்கு, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரே போதும். துவரிமானில் அவ்வசதி உள்ளது. அடையாள அட்டையும், ஊனத்திற்கான சான்றிதழும் இருக்கும் போது, டாக்டர்கள் கையெழுத்திட தயங்குவது வேதனையாக உள்ளது,'' என்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை மட்டும் வழங்கினால் போதுமென நினைக்கின்றனர்.

பஸ் பாஸ் மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டால் கூட, யாரை அணுகுவதென குறிப்பிடவில்லை.

போன் எண்ணும் இல்லாததால், பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள், மதுரை அரசு மருத்துவமனையில், மணிக்கணக்கில் பரிதாபமாக காத்திருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள், அவர்கள் பெற்றோர்களின் நிலை கருதி, அனைத்து வசதிகளையும், கலெக்டர் அலுவலகத்தில் பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Thanks to Dinamalar

ஆரம்ப நிலைப் பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டை, சுண்டல் மற்றும் சத்துமாவுடன் கூடிய மதிய உணவு திட்டம் : சமூகநலத்துறை சார்பில் சென்னையில் தொடக்கம்

 
29.01.2014
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் ரூபாய் செலவில், ஆரம்ப நிலைபயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் சுண்டலுடன் மதிய உணவும், இணை உணவுக்கான நுண்ணூட்டச் சத்துமாவும் வழங்கும் திட்டம், சமூகநலத்துறை சார்பில் சென்னையில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 6 வயதிற்குட்பட்ட மாற்றத்திறனாளி குழந்தைளுக்கான 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் உள்ள குழந்தைளுக்கு நுண்ணூட்டச் சத்துமாவும் மதிய உணவும் வழங்கும் திட்டத்திற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 46 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து, செவித்திறன், பார்வைத்திறன், மனவளர்ச்சி குன்றிய சென்னையில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 5 ஆரம்பநிலைப் பயிற்சி மையங்களில் உள்ள 125 குழந்தைகளுக்கு மதிய உணவும், சத்துமாவையும், சமூகநலத்துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் திரு. சிவசங்கரன், மாநில ஆணையர் டாக்டர் மணிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இணை உணவான நுண்ணூட்டச் சத்துமாவும், முட்டை மற்றும் சுண்டலுடன் மதிய உணவும் குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் மதிய உணவும், இணை உணவுக்கான நுண்ணூட்டச்சத்து மாவும் வழங்கும் திட்டம், வரும் 3-ம் தேதி முதல் செயல்படதொடங்கும் என்றும், இதன்மூலம், 87 பயிற்சி மையங்களிலும் பயிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவதில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thanks to Jaya TV News

சிறந்த சேவை ஆர்வலர் மாற்றுத்திறனாளி


Wednesday, January 29, 2014

போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளி

விருதுநகர், 29 January 2014

விருதுநகரில் போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளியை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(35). இவர் ஐ.டி.ஐ பயிற்சி பெற்றுள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமியுடன் ஆட்டோவில் லட்சுமி காலனியில் உள்ள எம்.பி அலுவலகத்திற்கு வேலைவாய்ப்புக் கேட்டு மனு அளிக்கச் சென்றார்களாம்.

அங்கு யாரும் இல்லாத காரணத்தால் ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இற்ங்கி சென்றுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆட்டோவில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பார்த்திபன் போலீஸாருடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கணவன் மனைவி என்பது தெரிந்தது.

பின்னர் அங்கிருந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுலைமான் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Thanks to

ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு உதவி

29.01.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில், ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம், ஏழை, எளியோர் மாற்றுத்திறனாளிகள், 500 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, உணவுதொழில் முன்னோடிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், தஞ்சை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியசர்மா தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடசுப்பு, மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட செயலாளர் சலீம் அக்பர் வரவேற்றார். இவ்விழாவில், கவுரவ தலைவர்கள் ராமதாஸ்ராவ், ரவி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், கலெக்டர் சுப்பையன், திருச்சி மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், ஏழை, எளியோயார் 500 பேருக்கு இலவச சீருடை, போர்வை, தட்டு, டம்ளர், மூன்று சக்கர சைக்கிள் உள்பட, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் சுப்பையன் பேசுகையில், ""உணவு சமைத்து, அளிக்கும் தொழில் உன்னதமானது. மக்களின் தேவை, எதிர்பார்ப்பு தற்கால சூழலில் அதிகமாக உள்ளது. போட்டி உலகமாக தற்போதைய சமுதாயம் மாறி வருகிறது. இச்சூழலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, அடுத்த கட்ட முன்னேற்ற படியை அடைய வேண்டும். மக்களுக்கு சேவை அடிப்படையில் பணியை தொடர வேண்டும்,'' என்றார். திருச்சி ஐ.ஜி., ராமசுப்பிரமணி பேசுகையில், ""பிற தொழிலாளரை விட ஹோட்டல் உரிமையாளர்கள், பொது சேவையை ஆற்றும் வகையில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில், வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். இவ்வகையில், வாடிக்கையாளர்கள் பாராட்டை பெறும் வகையில், உணவை சமைத்து, அளித்து சேவையாற்றுவோர் பலர் உள்ளனர். ஹோட்டல் தொழில் அதிகம்பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது,'' என்றார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை நகர ஹோட்டல்கள் சங்க தலைவர் பாண்டுரெங்கன், செயலாளர் முத்து உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில செயற்குழு தலைவர் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு தலைமையில் நடந்தது. விழாவை மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். நகர பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Thanks to

வலுவற்ற சட்டம் கொண்டுவர முயற்சியா? மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி - மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 3 தேதியில் போராட்டம்

சென்னையில் 7 இடங்களில் நவீன நடைபாதை- பணிகள் தீவிரம்; மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதி

 28.01.2014, சென்னை
 மாற்றுத் திறனாளிகளும் உணரும் வகையில் புதிய வசதியுடன் சென்னையில் ஏழு இடங்களில் நவீன நடைபாதைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாதசாரிகளும் மாற்றுத்திறனாளிகளும் இடையூறு இல்லாமல் பயன்படுத்தும் வகையில் 249 பேருந்து சாலைகளில் நவீன நடைபாதைகளை அமைக்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு திட்டமிட்டது. முதல்கட்டமாக 55 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் காவல்துறை ஆணையர் அலுவலகம் சாலை, வேனல்ஸ் சாலை, பாந்தியன் சாலை, கான்ரான் ஸ்மித் சாலை,கவிஞர் பாரதிதாசன் சாலை, டேங்க்பண்ட் சாலை (மகாலிங்கபுரம் பிரதான சாலை முதல் சுரங்கப்பாதை வரை), 70 அடி ஸ்கீம் சாலை (மகாலிங்கபுரம் பிரதான சாலை முதல் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை வரை) ஆகிய ஏழு சாலைகளில் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

கிரானைட் தூண்கள்

மற்ற இடங்களில் இல்லாத சில புதிய அம்சங்கள் இந்த கிரானைட் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சியுடன் இணைந்து பணிபுரியும் ஐ.டி.டி.பி. நிறுவனத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் அத்வைத் கூறுகையில், “நடைபாதைகள் தற்போது 2 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுவதால் அவற்றில் கார்களை நிறுத்துகின்றனர்.

இதைத் தடுக்க நடைபாதை ஓரங்களில் கிரானைட் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன சில இடங்களில் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இனி சாலைகளின் அகலம் மாறாமலும் நடைபாதைகளின் அகலம் சாலைகளுக்கு ஏற்றவாறும் இருக்கும். இதனால் குறுகிய சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்” என்றார்.

ஒலி எதிரொலிப்பான்கள் (ரிப்ளெக்டர்ஸ்)

நடைபாதையின் ஓரங்களையும் சாலை முனையையும் பார்வையற்றோர் தங்களது கைத்தடிகளைக் கொண்டு தட்டி உணரும் வகையில், காவல்துறை ஆணையர் அலுவலக சாலையில் மஞ்சள் நிற ஒளி எதிரொலிப்பான்கள் சோதனை முறையில் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் அம்பா சலேல்கர் கூறுகையில், “கைத்தடிகளை கொண்டு தரையில் தட்டியபடி செல்லும்போது வித்தியாசமாக ஏதாவது தென்பட்டால் அது நடைபாதையின் முனை அல்லது நடுவில் ஏதோ கட்டிடத்தின் வாசல் உள்ளது என்று பார்வையற்றோரால் தெரிந்து கொள்ள முடியும்.

நடைபாதையின் சாம்பல் நிறத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட மஞ்சள் நிறத்தில் இவை அமைக்கப்படுவதால் பார்வை மங்கலாக இருப்பவர்களும் இதை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் ரிப்ளெக்டர்ஸைவிட, நடைபாதையிலே வேறுவிதமான கற்களை பொருத்துவதே மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏழு இடங்களில் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

சில இடங்களில் மின்சாரப் பெட்டிகள் அகற்றப்படாமல் இருப்பதால் பணிகள் தாமதமாகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
Thanks to

Tuesday, January 28, 2014

வலுவற்ற மாற்றுதிரனா​ளி சட்டம் கொண்டுவர முயற்சி, பிப் 3 பாராளுமன்றம் நோக்கி பேரணி, நாடு முழுவதும் போராட்டம்

New Rights Bill - Govt Shocks Disabled - 3rd Feb Nation wide Struggle

As a consequence of the ratification of United Nations Convention on Rights of Persons with Disabilities (UNCRPD), India had undertaken to modify the domestic laws and bring them in consonance with the UN Convention. The process of drafting the new law started over four years ago and has gone through various stages, and was finally approved by the Union Cabinet on 12th December 2013.

Though we were not totally in agreement, we presumed that the Draft Rights of Persons with Disabilities Bill (dated September 2012), which is even now available on the MSJE Website was the one that was approved by the Cabinet. It is this draft that the TARADAC along with other organisations at the all India level, has been demanding tabling and passage.

However, we were in for a rude shock when we came across the Bill as passed by the Cabinet as it is completely at variance from the Draft submitted by the Department of Disability Affairs and is in violation of the essence and principles of UNCRPD.

To cite a few examples, the definition of Persons with Disability takes us back to a medical model; recognition of legal capacity of persons with disability, which is one of the main features of UNCRPD is completely diluted and mishandled; sections on the most vulnerable groups, children and women with disabilities, are missing; gaps in identification and recognition of jobs; reservation in promotions, regulatory mechanisms etc. are there.


We cannot accept the Bill in its present form. It needs to be amended before it is passed in parliament.

Monday, January 27, 2014

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு இலவச ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

26.01.2014
கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகளில் மாணவ–மாணவியர், பணிக்கு செல்பவர் மற்றும் சுயதொழில் புரிபவர் என்ற முன்னுரிமையில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வருடத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின்படி மேற் குறிப்பிட்ட தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு மேற்படி பொது திட்டத்தின் கீழ் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது.

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்பும் இரண்டு கால்களும் செயல் இழந்த, ஊன்றுகோல் உதவியுடன் நடக்கக்கூடிய 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வழங்க ஏற்கனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

ஸ்கூட்டர் பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபாலிலோ அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி நிலையச்சான்று, பணிச்சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடம் தாசில்தார் அலுவலகம் அருகே வீண்

 26.01.2014 பெருந்துறை:
பெருந்துறை நகரில், ஒரே வளாகமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளது. அங்கு வரும் மக்கள் பயன்பாட்டுக்கு, பொது கழிப்பிட வசதியில்லை. அதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாசில்தார் அலுவலகம் அருகில், மாற்று திறனாளிகளுக்கு, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது மக்கள் பயன்பட்டுக்கு திறந்து விடாமல், பல மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர்.
பெருந்துறை நகரில் கிளை கருவூலகம், சார்பு நீதிமன்றம், கிளை சிறை சாலை, போலீஸ் ஸ்டேஷன், நடுவர் நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், தொகுதி அரசு தேர்தல் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும், ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மேலும், அருகில் வட்ட வழங்கல் அலுவலகம், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பஸ் ஸ்டாப் உள்ளது.
இந்த அரசு அலுவலகங்களை நாடி தினமும், நூற்றுக்கணக்கான மக்கள், பெருந்துறை தொகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து, செல்கின்றனர். பல்வேறு பணிக்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள், சிறுநீர் கழிக்க, கழிப்பிட வசதியில்லாமல், நாள் முழுக்க தடுமாறுகின்றனர். இதில் பெண்கள் படும்பாடு சொல்ல முடியாது.
தாசில்தார் அலுவலகம் அருகில் மாற்று திறனாளிகளுக்கு, அரசு சார்பில் புதிதாக, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை திறக்காமல், பூட்டி வைத்துள்ளனர். மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், என்பது மக்கள் கோரிக்கையாகும்.
கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மேலும் ஒரு பொது கழிப்பிடம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டி, மக்கள் அவதியை போக்க வேண்டும், என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.
Thanks to 

Friday, January 24, 2014

காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

23.01.2014, புதுவை,
காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எஸ்எம்எஸ் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கம் சார்பில் புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காது கேளாதோர் கூட்டுறவு அமைப்புத் தலைவர் சரவணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க துணைத்தலைவர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இதுகுறித்து புதுவை காதுகேளாதோர் கூட்டுறவு அமைப்பு தலைவர் சரவணன் கூறியது:

செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களும், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவை சலுகைக் கட்டணத்தில் எஸ்எம்எஸ் அனுப்ப திட்டங்கள் வைத்துள்ளன.

ஒரு தொலைப்பேசி உரையாடலை, 20 எஸ்எம்எஸ்க்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் தெரிவிக்க வேண்டிய சூழலில், ஒரு நாளில் ஒரு எண்ணில் இருந்து 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கொண்டு வந்தது.

இதுதவிர பண்டிகை காலங்களில் ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நடவடிக்கையை நீக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் டிராய் அமைப்புக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இதற்கு ஒரு தீர்வு காணும் வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.

Thanks to

Thursday, January 23, 2014

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை செல்பேசி நிறுவனங்கள் தளர்த்த கோரி மாற்று திறனாளிகளின் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

 
22.01.2014, புதுச்சேரி
காதுகேளாதோர் வாய்ப்பேசமுடியாதோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள குறுந்செய்தி அனுப்பும் வசதியை தடுக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 குறுந்செய்தி மட்டுமே அனுப்பமுடியும் என்ற பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்பேசி நிறுவனங்களின் கட்டுபாட்டை உடனடியாக தளர்த்த வேண்டும்.சலுகை கட்டணத்தில் குறுஞ்செய்தி அனுப்ப திட்டங்கள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் இச்சலுகை மறுக்கப்பட்டு முழு கட்டணம் என்ற பெயரில் குறுஞ்செய்திக்கு கூடுதல்தொகை வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.ஒரு நிமிட தொலைப்போசி உரையாடலை காதுகேளாதவாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் குறுஞ்செய்தி மூலம் உரையாடினால்,குறைந்தபட்சம் 20குறுஞ்செய்திகள் அனுப்ப நேரிடுகிறது எனவே முழுகட்டணத்தை உடனே திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காதுகேளாதோர் கூட்டுறவு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.லட்சுமனன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று பேசினார்.புதுச்சேரி தலைவர் ராஜாங்கம்,புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு செயலாளர் பாலமுருகன்,எல்ஐசி முகவர் சங்கத்தின் மாநில செயலாளர் ராம்ஜி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொஞ்சியப்பன் உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேனி, -20.01.2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 70 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்குள் மக்கள் மனு கொடுக்க செல்லும் வாசல் பகுதியில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கோஷம் எழுப்பியடி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகளை கூட்டரங்கை நோக்கி வீசி எறிந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சிலர் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் 6 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

கூட்டரங்கில் இருந்த மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமியை மாற்றுத்திறனாளிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கூறு கையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி அடையாள அட்டையை தவிர எந்தவித நலத்திட்டமும் கிடைக்கவில்லை. தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, தொழிற்கடன், வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும். தாட்கோவில் கடன் பெற முயன்றால் அதி காரிகள் எங்களை வேண்டா வெறுப்புடன் பார்க்கிறார்கள். அரசு வழங்கும் நலத்திட்டங்களை தடைகள் இன்றி எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Thanks to

Wednesday, January 22, 2014

செவித்திறன் குறைவுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பேச்சு மொழி பயிற்சி

விருதுநகர் , 22 January 2014
விருதுநகர் மாவட்டத்தில் செவித்திறன் குறைவுடைய சிறுவர், சிறுவர் சிறுமிகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இம்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செவித்திறன் குறைபாடுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பேச்சு மொழி பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டிலும் இப்பயிற்சி மையங்களில் செவித்திறன் குறைவுடையவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்கு 6 மாதம் முதல் மூன்றரை வயதிற்கு உள்பட்ட செவி்த்திறன் குறைவுடைய சிறுவர், சிறுமிகளாக இருக்க வேண்டும். மேலும், இவர்களுக்கு இரண்டு செவிகளில் பொறுத்துவதற்கான செவித்துணை கருவிகளைக் கொண்டு பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி ஆகியவை சிறப்பு உபகரணங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. அதையடுத்து, தொடர்ந்து 6 வயதில் சாதாரண பள்ளியில் சேர்ந்து முதல் வகுப்பு படிப்பதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால், உடனே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தை நேரில் அணுகி, ஆரம்ப கால பயிற்சி மையத்தில் சிறுவர், சிறுமிகளை சேர்த்து பயனடையும்மாறு பொதுமக்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Thanks to

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

ஜனவரி 22, 2014,
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவி புரிய கூடிய மாநில ஒருங்கிணைப்புக் குழுவை முறையாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,அரசு துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


Thanks to
 

Saturday, January 18, 2014

NEW DISABILITY RIGHTS BILL - Requesting Tamil Nadu Parties to Pressurise Centre

Tamilnadu Association for the Rights of All Types of Differently Abled & Caregivers wrote letter to major political parties in TN requesting them to pressurise the Centre for the passage of New Disability Rights Bill in the forthcoming parliament itself.

Content of the lrs as follows:
With India ratifying the UN Convention on Rights of Persons with Disabilities (UNCRPD) in 2007, it was expected that all the four disability specific legislations - the Mental Health Act 1987, Rehabilitation Council of India Act 1992, Persons with Disability (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act 1995 and the National Trust Act 1999 would be harmonised with the provisions of the UNCRPD.

However, while the Mental Health Care Bill has been introduced in Parliament, the Bill replacing the 1995 Disability Act is yet to be introduced.

Though the process of drafting the new law started over four years back and has gone through various stages, the delay in introducing this legislation is inexplicable. More than a year has passed since the new draft of the proposed Bill was uploaded on the website of the Ministry of Social Justice & Empowerment in September 2012.

The Minister for Social Justice & Empowerment had given an assurance that the Bill would be introduced in the Winter Session of Parliament. The Union Cabinet gave its approval to the Draft Bill on 12th December, 2013. However, the abrupt end of the Parliament session on 18th December prevented the Bill from being tabled.

We would request you to please ensure and pressurise te central govt as well the parliamentary affairs minister for the introduction and pass the Bill in the forthcoming Vote on Account session itself, this extremely important piece of legislation is taken up in both houses of Parliament and passed.


Click here for

மாற்றுத்திறனாளி புதிய உரிமைகள் சட்டம் - நிறைவேற்ற ஆதரவு கோரி

மாற்றுத்திறனாளிகள் புதிய சட்டம் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் SMS-க்கு முழு கட்டணம் மற்றும் எண்ணிக்கை கட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,ஜன.17–

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற பிப். 28ம் தேதிக்குள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலுர் கலெக்டர் தரேஷ் அகமது தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:– அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து பிப். 28ம் தேதிக்குள் பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2012 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ– மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதுரக் கல்வி பயிலுபவராக இருக் கலாம். மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை ஒரு போட்டோ மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் பிப். 28ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thanks to

Friday, January 17, 2014

New Disability Rights Bill – Meeting with Javed Abidi & Other Activists - INVITATION

Dear friends,

As you are aware currently a campaign is underway for the speedy enactment of Rights of Persons with Disabilities Bill. After India’s ratification of the UN Convention on Rights of Persons with Disabilities (UNCRPD) in 2007, it was expected that all the four disability specific legislations - the Mental Health Act 1987, Rehabilitation Council of India Act 1992, Persons with Disability (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act 1995 and the National Trust Act 1999 would be harmonised with the provisions of the UNCRPD.

The process of drafting a new law from rights perspectives started four years ago. The minister for Social Justice & Empowerment had given an assurance that the Bill would be introduced in the Winter Session of Parliament. The Union Cabinet gave its approval to the Draft Bill on 12th December, 2013. However, the abrupt end of the Parliament session on 18th December prevented the Bill from being tabled.

On the demand of introducing the Bill in the coming session, National Platform for Rights of Disabled (NPRD) and Disabled Rights Group (DRG) have been organising different programmes – candle light vigils to meetings in different parts of the country as also meeting leaders of various political parties and writing to MPs etc.

The Tamilnadu Association of All Types of Differently Abled and Caregivers, an affiliate of the NPRD, is orgainising a meeting on this issue.




Apart from leaders of the NPRD, Shri Javed Abidi, Convenor, DRG and Chairman, Disabled People International (DPI) will address the meeting. Please find below the timing and venue of the meeting.

Venue: Meeting Hall, 1st Floor(Lift Available),
Mayor Radhakrishnan Hockey Stadium
Egmore, Chennai-600 008.


Date: Thursday, January 30, 2014

Time: 10-30 am to 12-30 noon


"All those supporting this initiative are invited to attend this meeting"

Thanking you,
 

Thursday, January 16, 2014

Introduce & Pass the Rights of Persons with Disabilities Bill 2013

Republic Day ceremony coverage to have sign language interpreter during DD telecast

16.01.2014 NEW DELHI: 
The live telecast of the Republic Day parade by Doordarshan channels will have an additional facility this year – a sign language interpreter.

The Information and Broadcasting Ministry (I&B) has issued directions to Prasar Bharati for making a provision for having an inset box on the TV screens during the telecast of the Republic Day Ceremony, through which the sign language anchor/expert could interpret the proceedings of the Republic Day parade on 26 January.

The telecast will be on DD National, DD Urdu, DD Bharati and DD News.

The decision has been taken in the interest of all those who are differently-abled, hearing impaired citizens. I&B minister Manish Tewari received a representation from the National Association of Deaf recently requesting for providing sign language interpreter in an inset box on TV screens during the live coverage of the Republic Day Parade.


Thanks to Indian Television

Republic Day Ceremony Coverage to have Sign Language Interpreter during Telecast

Thanks to
Bollini Gopi தமிழ் காது கேளாதோர் கருத்துக்களம் ( Tamil Deaf Community )

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

சென்னை , 16 January 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தங்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை என்பதோடு, சலுகைக் கட்டணத்துக்குப் பதில் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு கடந்த 29-10-2008 அன்று அரசாணை (எண்.153) ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ரயில்களில் உள்ளதுபோல் அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்களிலும் மாற்றுத் திறனாளிகள் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை மட்டும் (75 சதவீத கட்டணச் சலுகை) செலுத்தி பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்டது.

இதுபோல் 31-6-2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் (எண்.18), உதவியாளரின் துணையின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத் திறனாளிகளுடன் ஒரு துணையாளர் மாநகர பஸ்கள் மற்றும் ஏ.சி. பஸ்களைத் தவிர பிற பஸ்களில் 75 சதவீத கட்டணச் சலுகையில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணைகளை நடத்துனர்கள் மதிப்பதே இல்லை என மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்ற மாற்றுத் திறனாளிகளும் இந்த பாதிப்புகளுக்கு உள்ளானதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கப் பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன் கூறியது:

சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களில் மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கவேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், இந்தச் சலுகையை அளிக்க நடத்துனர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

மேலும், ஒரு பஸ்ஸில் அதிகபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை ஏற்றிக் கொள்ள நடத்துநர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளிகள் பல மணி நேரம் காத்திருந்து அடுத்த பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
.....2

மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா நிறைவேற்றப்படும்

புது தில்லி, 16 January 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மசோதா பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் "சமர்த் 2014' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோனியா காந்தி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுத் துறை நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதமாகவும், ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 1995-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை சமூக நீரோட்டத்துடன் அரசு இணைக்க வேண்டும். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.

அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும்.

அவர்களது சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அவர்களின் பிரச்னைகளை நாம் மருத்துவ ரீதியில் மட்டுமே அணுகுகிறோம். இதை நாம் மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கக் கூடாது. அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.

Thanks to

Wednesday, January 15, 2014

இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு
latha ramakrishnan
லதா ராமகிருஷ்ணன்
இலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில் சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.
உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

இலக்கிய ஊடக வெளிகளில் மாற்றுத்திறனாளிகள்:
மாற்றுத்திறனாளிகள் மதிப்பழிக்கப்படுவது, கேலிப்பொருளாக பாவிக்கப்படுவது சின்னத் திரை பெரியதிரைகளில் காலங்காலமாக இருந்துவரும் போக்கு. ஏதாவதொரு சமயத்தில்தான் இதுகுறித்து எதிர்ப்புக்குரல் ஒலிக்கிறது. தொடர்ந்த ரீதியில் இத்தகைய போக்குகள் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை.

பெரும்பாலான நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று, அனுதாபத்துடன் அணுகப்படுகிறார்கள், அல்லது, அலட்சியமாக, அசிரத்தையாக அணுகப்படுகிறார் கள்.

பாதிப்புக்குள்ளானவர்களால்தான் தங்களுடைய பிரச்னைகளை சரிவர எடுத்துரைக்க முடியும் என்ற பார்வையின் அடிப்படையில் பார்த்தோமானால் மாற்றுத்திறனாளிகள் எத்தனைபேர் இலக்கியப்படைப்பாளிகளாய் விளங்குகிறார்கள்? விளங்கியிருக்கிறார்கள்?

இதுபோன்ற கேள்விகளை உள்ளடக்கிய ஆழமான ஆய்வலசல் எதுவும் தமிழில் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. வரவேண்டியது அவசியம்.
கடந்த 30 வருடங்களாக நான் பங்கேற்றிருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் [WELFARE FOUNDATION OF THE BLIND] என்ற ‘பார்வையற்றோர் நன்நல அமைப்பி’ல் இந்த நோக்கில் கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகள்/ வாழ்க்கை குறித்துப் பேசும் நூல்களையும், பார்வையற்றோரின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் நூல்களயும் வெளியிட்டு வருகிறோம். இதுபோல் வேறு சில தனிநபர்களும் அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கக்கூடும். ஆனால், இவை போதுமா?

‘பெண் என்பதால் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டும்தான் எழுத வேண்டுமா?  பெண் என்பதாலேயே எல்லாத்தரப்புப் பெண்களுக்குமான பிரதிநிதியாய் பெண்களின் பிரச்னைகளை, இயல்புகளை, வாழ்க்கையை துல்லியமாக எழுத்தில் வடித்துவிட இயலுமா? என்பதான கேள்விகளைப் போலவேதான் மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலும் கேள்விகள் எழுவது இயல்பு. தவிர, மாற்றுத்திறனாளிகள் என்ற பிரிவில் பலதரப்பட்ட உடற்குறை உள்ளவர்களும் அடங்குவர்.

எப்படியிருந்தாலும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் சீரிய பங்களிக்கும் [உரிய வழிவாய்ப்புகள் தரப்பட்டால் அங்கத்தினர்கள் இன்னும் சிறப்பாகப் பங்களிக்கக் கூடியவர்கள்]என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. சமூக அங்கத்தினர்கள் என்ற அளவில் இலக்கியப்படைப்பு களிலும், ஒளி-ஒலி ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பும் சித்திரிப்பும் எத்தகையதாய் விளங்குகிறது?

படைப்புவெளியில் பார்வையற்றோர்
இலக்கியம் நமக்கு எதிராக இயங்குகிறதா? [IS LITERATURE AGAINST US?] என்ற அகல்விரிவான கட்டுரையொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. டாக்டர் கென்னெத் ஜெர்நிகன் என்ற பார்வையற்றவர் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கும் அந்தக் கட்டுரை அழுத்தமான ஆதாரங்களுடன் ‘இலக்கியப் படைப்புகள் பார்வையற்றோரைப் பார்க்கும் ‘அறியாமை நிரம்பிய பாரபட்சப் பார்வையை எடுத்துரைத்திருக்கிறது. பார்வையின்மை என்பது தண்டனையாகவும், தெய்வம் தந்த வரமாகும்படியான தூய பண்பாகவும், பார்வைக்குறைபாடுடையவர் பரிதாபத்திற்குரியவர், கயவர், ஏமாற்றுக்காரர், திருமண வாழ்க்கையில் திருப்திகரமாக ஈடுபட முடியாதவர், தனித்ஹ்டியங்க இயலாதவர் என பலவிதமான எதிர்மறைச் சித்திரிப்புகளாய் காலங்காலமாய் இலக்கியப்படைப்புகளில் தரப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். பார்வையிழப்பிற் குப்பின் ‘பாரடைஸ் லாஸ்ட்’[இழந்த சொர்க்கம்] என்ற அமர காவியத்தை எழுதிய மில்ட்டன்கூட சமூகத்தில் பார்வையற்றோர் குறித்து நிலவும் எதிர்மறைப் பார்வைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவராய் அத்தகைய எதிர்மறைக் கருத்துகளையே, அதாவது பார்வையின்மை இறப்பைவிடக் கொடியது, பார்வையற்றவர் சபிக்கப்பட்டவர் என்ற ரீதியில், சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி யுள்ளார். நம்முடைய உண்மைநிலையை உலகுக்கு எடுத்துச்சொல்ல நாம் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். கண்டிப்பாகத் தமிழில் மொழி பெயர்க் கப்படவேண்டிய இந்தக் கட்டுரை நம் கையில் கிடைப்பதற்கே இருபதாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

கணினி, கைபேசி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் இன்று பார்வைக் குறைபாடுடைய மனிதர்களால் இதுவரை படிக்கக் கிடைக்காமலிருந்த பல புனைவு, அ-புனைவுப் பிரதிகளை அவர்களால் படிக்கமுடிகிறது.

ஆனால், இந்த இருபது, முப்பது ஆண்டுகளில் படைப்பு வெளியில் படைப்பாளிகளாகவும், பாத்திரங்களாகவும் இடம்பெறுதல் அளவிலும் தரத்திலும் [quantity-wise and quality-wise]அதிகமாகியிருக்கிறதா என்றால் இல்லை யென்றே சொல்லவேண்டும்.

காலிழந்தவர் கதாநாயகியாகக்கூடாதா?
முப்பது வருடங்களுக்குமேல் இருக்கும். விபத்தில் தனது ஒரு காலை இழந்து விட்ட பதினாறுவயதுப் பெண் சுதா சந்திரன் தன் விடாமுயற்சியால் நடுவில் நின்று போன நாட்டியப்பயிற்சியை செயற்கைக்காலுடன் நிறைவுசெய்து ‘மயூரி’ படத்தில் நடித்து பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த சமயம். அப்போதைய பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் ஒருவருடைய தொடர்கதையின் கதாநாயகனுக்கு செயற்கைக்கால். அவன் மூலம் வாசகர்களுக்கு அறிவுரை தருவதாய் அந்த எழுத்தாளர், ‘நம்முடைய உடற்குறையை நாம் மறுதலிக்கலாகாது. இயலாத விஷயத்திற்கு முயற்சி செய்யலாகாது. திரைப்படங்களில் நடித்தால் ஒன்றிரண்டு தடவைகள் பரிதாபத்திற் காய் பார்ப்பார்கள். பிறகு...?’ என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போய் ‘மயூரி ஒரு முட்டாள்’ என்று ‘மனிதநேய’த்தோடு முடித்திருந்தார். அந்த சுதா சந்திரன் இன்றளவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மாறாக, ‘டப்பிங்’ அதாவது இரவல் குரல் கொடுத்தல் என்ற, இன்று சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் பெருமளவு பயன்படுத்தபட்டுவரும் உத்தியைப் பயன் படுத்தி காதுகேளாத, வாய்பேசாத பெண்ணொருத்தியைத் தங்கள் படத்தில் இயல்பான கதாநாயகியாக நாடோடி படத்தில் நடிக்கச்செய்த முயற்சி பாராட்டிற்குரியது. இதுபோன்ற முயற்சிகள் ஒளி-ஒலி ஊடகங்களில் அதிகம் இடம்பெறவேண்டியது அவசியம். அதற்கு, சமூகத்திலும், குறிப்பாக படைப்பாளிகளிடம் மாற்றுத் திறனாளிகள் குறித்தபுரிதலும், அவர்களாலும் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள இயலும் என்ற புரிதலும் அதிகமாக வேண்டும்.

வேண்டுவது அனுதாபமல்ல: அங்கீகாரமே
பெண்கவிஞர் என்ற ஒற்றைச் சொற்பிரயோகத்தில் இலக்கியம் தெரிந்த தெரியாத, கவிதை தெரிந்த தெரியாத, நவீன கவிதை தெரிந்த தெரியாத ஆண்களெல்லோருமே படைப்புத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பாய்வு செய்யும் தகுதியுடையவர் களாகிவிடுவதுபோல், வெகு சுலபமாய் தங்களை புரவலர் நிலையில் ஆலோசகர் நிலையில் மேலடுக்கில் நிலைபெறச்செய்து கொண்டு விடுவது போலவே உடற் குறையுடையவர்கள் – அவர்கள் எழுத் தாளர்களோ, வாசகர்களோ – உடற்குறையுள்ள படைப்பாளிகளை அனுதாபத் தோடு பார்ப்பதும், அவர்களுக்கு அறிவுரை கூற முற்படுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்று.

ஏதேனும் உடற்குறையுடையவர்கள் படைபாக்கத்தில் ஈடுபட்டால் உடனே அவருக்கு ஆலோசனை கூறவும் அறிவுரை தரவும் பலர் முன் வந்துவிடுகிறார்கள். ‘பார்வைக்குறை உடையவர்கள் பார்வையின்மை, அது சார்ந்த பிரச்னைகளையே முன்னுரிமைப்படுத்தி எழுத வேண்டும். ஏனெனில், அவற்றையெல்லாம் அத்தனை நம்பகத்தன்மையோடு மற்றவர்களால் எழுத இயலாதல் லவா?” என்று தங்கள் ஆலோசனைகளுக்கு நியாயம் கற்பிப்பார்கள். பார்க்கமுடியாது, பேச முடியாது, கேட்க முடியாது என்ற நிலையிலும் கல்வி கற்று தேர்ச்சி பெற்று பார்வையற் றவர்களின் நலவாழ்வுக்காகப் பெரும்பங்காற்றிய ஹெலன் கெல்லருக்கும் இந்த அனுபவம் உண்டு. அவர் தன்னுடைய சுயசரிதையை, தான் பட்ட துன்பங்களை எழுதியபோது அவருடைய எழுத்தைக் கொண்டாடிய சமூகம், சமூகத்தின் ஓர் அங்கத்தினராய் அவர் சமூக அவலங்கள் குறித்து எழுதியபோது, அவை குறித்த தனது அக்கறையான பார்வைகளை, கருத்துகளை முன்வைத்தபோது அந்த முயற்சியை எளிதாகப் புறந்தள்ளிவிட்டதாம். REBEL LIVES என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ள ‘ஹெலென் கெல்லர் நூல் இதை விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது என்று விவரம் கிடைத்தது.
......2