FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, January 18, 2014

பெரம்பலூர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,ஜன.17–

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற பிப். 28ம் தேதிக்குள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலுர் கலெக்டர் தரேஷ் அகமது தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:– அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து பிப். 28ம் தேதிக்குள் பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2012 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ– மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதுரக் கல்வி பயிலுபவராக இருக் கலாம். மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை ஒரு போட்டோ மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் பிப். 28ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thanks to

No comments:

Post a Comment