FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 11, 2014

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 14¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

 10.01.2014, பெரம்பலூர், –
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புது வாழ்வுத்திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்
101 பயனாளிகளுக்கு...
மாற்றுத்திறனளிகள் நலத்துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளி களுக்கு ரூ.14 லட்சத்து 25ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை யும்,பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதியினை யும் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் மூலம் மொத்தம் 84 பேருக்கு ரூ.12லட்சத்து 57 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிறப்பு நிதி
மேலும். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கு ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற 128 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் மாற்றுதிறனாளிகளுக் கான தனி நபர் கடன் மற்றும் சிறுப்புக்குழுக்கான நேரடி கடன் வழங்கும் திட்டங்களின் கீழ் 17 பேருக்கு ரூ.1லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 10 பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ரூ. 5லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதிக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சகுந்தலா கோவிந்தன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மருதராஜா (பெரம்பலூர்) வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), ஜெயலட்சுமி கனகராஜ் (வேப்பந்தட்டை),மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வு திட்ட மேலாளர் சுதாதேவி உள்ளிட்ட அலுவலர்கள். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Thanks to 

No comments:

Post a Comment