FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, January 11, 2014

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 14¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

 10.01.2014, பெரம்பலூர், –
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புது வாழ்வுத்திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்
101 பயனாளிகளுக்கு...
மாற்றுத்திறனளிகள் நலத்துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளி களுக்கு ரூ.14 லட்சத்து 25ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை யும்,பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதியினை யும் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் மூலம் மொத்தம் 84 பேருக்கு ரூ.12லட்சத்து 57 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிறப்பு நிதி
மேலும். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கு ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற 128 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் மாற்றுதிறனாளிகளுக் கான தனி நபர் கடன் மற்றும் சிறுப்புக்குழுக்கான நேரடி கடன் வழங்கும் திட்டங்களின் கீழ் 17 பேருக்கு ரூ.1லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 10 பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ரூ. 5லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதிக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சகுந்தலா கோவிந்தன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மருதராஜா (பெரம்பலூர்) வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), ஜெயலட்சுமி கனகராஜ் (வேப்பந்தட்டை),மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வு திட்ட மேலாளர் சுதாதேவி உள்ளிட்ட அலுவலர்கள். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Thanks to 

No comments:

Post a Comment