FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 11, 2014

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 14¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

 10.01.2014, பெரம்பலூர், –
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புது வாழ்வுத்திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்
101 பயனாளிகளுக்கு...
மாற்றுத்திறனளிகள் நலத்துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளி களுக்கு ரூ.14 லட்சத்து 25ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை யும்,பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதியினை யும் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் மூலம் மொத்தம் 84 பேருக்கு ரூ.12லட்சத்து 57 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிறப்பு நிதி
மேலும். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கு ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற 128 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் மாற்றுதிறனாளிகளுக் கான தனி நபர் கடன் மற்றும் சிறுப்புக்குழுக்கான நேரடி கடன் வழங்கும் திட்டங்களின் கீழ் 17 பேருக்கு ரூ.1லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 10 பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ரூ. 5லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதிக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சகுந்தலா கோவிந்தன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மருதராஜா (பெரம்பலூர்) வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), ஜெயலட்சுமி கனகராஜ் (வேப்பந்தட்டை),மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வு திட்ட மேலாளர் சுதாதேவி உள்ளிட்ட அலுவலர்கள். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Thanks to 

No comments:

Post a Comment