FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, January 22, 2014

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

ஜனவரி 22, 2014,
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவி புரிய கூடிய மாநில ஒருங்கிணைப்புக் குழுவை முறையாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,அரசு துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


Thanks to
 

No comments:

Post a Comment