FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 16, 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

சென்னை , 16 January 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தங்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை என்பதோடு, சலுகைக் கட்டணத்துக்குப் பதில் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு கடந்த 29-10-2008 அன்று அரசாணை (எண்.153) ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ரயில்களில் உள்ளதுபோல் அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்களிலும் மாற்றுத் திறனாளிகள் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை மட்டும் (75 சதவீத கட்டணச் சலுகை) செலுத்தி பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்டது.

இதுபோல் 31-6-2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் (எண்.18), உதவியாளரின் துணையின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத் திறனாளிகளுடன் ஒரு துணையாளர் மாநகர பஸ்கள் மற்றும் ஏ.சி. பஸ்களைத் தவிர பிற பஸ்களில் 75 சதவீத கட்டணச் சலுகையில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணைகளை நடத்துனர்கள் மதிப்பதே இல்லை என மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்ற மாற்றுத் திறனாளிகளும் இந்த பாதிப்புகளுக்கு உள்ளானதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கப் பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன் கூறியது:

சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களில் மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கவேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், இந்தச் சலுகையை அளிக்க நடத்துனர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

மேலும், ஒரு பஸ்ஸில் அதிகபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை ஏற்றிக் கொள்ள நடத்துநர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளிகள் பல மணி நேரம் காத்திருந்து அடுத்த பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
.....2

மேலும் புதுச்சேரி வழியாகச் செல்லும் பஸ்களில், அந்த மாநிலத்துக்குள் பயணம் செய்யும்போது கட்டணச் சலுகை மறுக்கப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால், பயணிப்பது தமிழக அரசு பஸ்ஸாக இருந்தபோதும் புதுச்சேரி வேறு மாநிலம், எனவே அரசாணை இங்கு செல்லாது என்கின்றனர்.

இதன் காரணமாக, சென்னையிலிருந்து கடலூர் செல்லும் மாற்றுத் திறனாளியிடம், சென்னையிலிருந்து புதுவை எல்லை வரை நான்கில் ஒரு பங்கு சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர் புதுவையிலிந்து கடலூர் எல்லை வரை முழு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் கடலூர் எல்லையிலிருந்து 75 சதவீத கட்டணச் சலுகையை அளிக்கின்றனர். இதற்காக இரண்டு முறை ஆவண நகல்களையும் மாற்றுத் திறனாளிகள் அளிக்க வேண்டியுள்ளது.

மாநகர பஸ்களில்: மாநகரப் போக்குவரத்துக்கழகத்தைப் பொருத்தவரை, மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து பணியிடத்துக்குச் சென்று வருவதற்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

செங்குன்றத்திலிருந்து கோட்டூர்புரத்துக்கு பணிக்குச் செல்லும் மாற்றுத் திறனாளி முதலில் கிண்டி தொழிற்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து 21ஜி பஸ்ஸில் கோட்டூர்புரத்துக்கு செல்ல வேண்டும்.

ஆனால், மாலையில் வீடு திரும்பும்போது, 21ஜி பஸ் கிண்டி தொழிற்பேட்டைக்கு வருவதில்லை. மாறாக எதிர்ப்புறத்தில் கிண்டி பாலத்துக்கு பின்புறம் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து மாற்றுத் திறனாளிகள் கிண்டி தொழிற்பேட்டைக்கு நடந்து வருவது சிரமம். இதனால், வேளச்சேரியிலிருந்து வரும் ஜி70 பஸ்ஸில் கிண்டி தொழிற்பேட்டைக்குச் செல்லும் நிலை உள்ளது.

அவ்வாறு செல்லும்போது ஜி70 பஸ்ஸில் முழு டிக்கெட் கட்டணத்தை மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டியுள்ளது. அரசாணைப்படி நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க மறுக்கின்றனர்.

இதனால், மாற்றுத் திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அரசாணைகளை போக்குவரத்துக்கழகங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிடவேண்டும் என்றார்.

Thanks to

No comments:

Post a Comment