FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, January 16, 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

சென்னை , 16 January 2014

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தங்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை என்பதோடு, சலுகைக் கட்டணத்துக்குப் பதில் முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு கடந்த 29-10-2008 அன்று அரசாணை (எண்.153) ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ரயில்களில் உள்ளதுபோல் அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்களிலும் மாற்றுத் திறனாளிகள் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை மட்டும் (75 சதவீத கட்டணச் சலுகை) செலுத்தி பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்டது.

இதுபோல் 31-6-2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் (எண்.18), உதவியாளரின் துணையின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத் திறனாளிகளுடன் ஒரு துணையாளர் மாநகர பஸ்கள் மற்றும் ஏ.சி. பஸ்களைத் தவிர பிற பஸ்களில் 75 சதவீத கட்டணச் சலுகையில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணைகளை நடத்துனர்கள் மதிப்பதே இல்லை என மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்ற மாற்றுத் திறனாளிகளும் இந்த பாதிப்புகளுக்கு உள்ளானதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கப் பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன் கூறியது:

சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களில் மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கவேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், இந்தச் சலுகையை அளிக்க நடத்துனர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

மேலும், ஒரு பஸ்ஸில் அதிகபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை ஏற்றிக் கொள்ள நடத்துநர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளிகள் பல மணி நேரம் காத்திருந்து அடுத்த பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
.....2

மேலும் புதுச்சேரி வழியாகச் செல்லும் பஸ்களில், அந்த மாநிலத்துக்குள் பயணம் செய்யும்போது கட்டணச் சலுகை மறுக்கப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால், பயணிப்பது தமிழக அரசு பஸ்ஸாக இருந்தபோதும் புதுச்சேரி வேறு மாநிலம், எனவே அரசாணை இங்கு செல்லாது என்கின்றனர்.

இதன் காரணமாக, சென்னையிலிருந்து கடலூர் செல்லும் மாற்றுத் திறனாளியிடம், சென்னையிலிருந்து புதுவை எல்லை வரை நான்கில் ஒரு பங்கு சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர் புதுவையிலிந்து கடலூர் எல்லை வரை முழு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் கடலூர் எல்லையிலிருந்து 75 சதவீத கட்டணச் சலுகையை அளிக்கின்றனர். இதற்காக இரண்டு முறை ஆவண நகல்களையும் மாற்றுத் திறனாளிகள் அளிக்க வேண்டியுள்ளது.

மாநகர பஸ்களில்: மாநகரப் போக்குவரத்துக்கழகத்தைப் பொருத்தவரை, மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து பணியிடத்துக்குச் சென்று வருவதற்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

செங்குன்றத்திலிருந்து கோட்டூர்புரத்துக்கு பணிக்குச் செல்லும் மாற்றுத் திறனாளி முதலில் கிண்டி தொழிற்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து 21ஜி பஸ்ஸில் கோட்டூர்புரத்துக்கு செல்ல வேண்டும்.

ஆனால், மாலையில் வீடு திரும்பும்போது, 21ஜி பஸ் கிண்டி தொழிற்பேட்டைக்கு வருவதில்லை. மாறாக எதிர்ப்புறத்தில் கிண்டி பாலத்துக்கு பின்புறம் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து மாற்றுத் திறனாளிகள் கிண்டி தொழிற்பேட்டைக்கு நடந்து வருவது சிரமம். இதனால், வேளச்சேரியிலிருந்து வரும் ஜி70 பஸ்ஸில் கிண்டி தொழிற்பேட்டைக்குச் செல்லும் நிலை உள்ளது.

அவ்வாறு செல்லும்போது ஜி70 பஸ்ஸில் முழு டிக்கெட் கட்டணத்தை மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டியுள்ளது. அரசாணைப்படி நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க மறுக்கின்றனர்.

இதனால், மாற்றுத் திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அரசாணைகளை போக்குவரத்துக்கழகங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிடவேண்டும் என்றார்.

Thanks to

No comments:

Post a Comment