FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, January 27, 2014

மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடம் தாசில்தார் அலுவலகம் அருகே வீண்

 26.01.2014 பெருந்துறை:
பெருந்துறை நகரில், ஒரே வளாகமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளது. அங்கு வரும் மக்கள் பயன்பாட்டுக்கு, பொது கழிப்பிட வசதியில்லை. அதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாசில்தார் அலுவலகம் அருகில், மாற்று திறனாளிகளுக்கு, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது மக்கள் பயன்பட்டுக்கு திறந்து விடாமல், பல மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர்.
பெருந்துறை நகரில் கிளை கருவூலகம், சார்பு நீதிமன்றம், கிளை சிறை சாலை, போலீஸ் ஸ்டேஷன், நடுவர் நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், தொகுதி அரசு தேர்தல் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும், ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மேலும், அருகில் வட்ட வழங்கல் அலுவலகம், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பஸ் ஸ்டாப் உள்ளது.
இந்த அரசு அலுவலகங்களை நாடி தினமும், நூற்றுக்கணக்கான மக்கள், பெருந்துறை தொகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து, செல்கின்றனர். பல்வேறு பணிக்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள், சிறுநீர் கழிக்க, கழிப்பிட வசதியில்லாமல், நாள் முழுக்க தடுமாறுகின்றனர். இதில் பெண்கள் படும்பாடு சொல்ல முடியாது.
தாசில்தார் அலுவலகம் அருகில் மாற்று திறனாளிகளுக்கு, அரசு சார்பில் புதிதாக, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை திறக்காமல், பூட்டி வைத்துள்ளனர். மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், என்பது மக்கள் கோரிக்கையாகும்.
கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மேலும் ஒரு பொது கழிப்பிடம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டி, மக்கள் அவதியை போக்க வேண்டும், என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.
Thanks to 

No comments:

Post a Comment