FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, January 27, 2014

மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடம் தாசில்தார் அலுவலகம் அருகே வீண்

 26.01.2014 பெருந்துறை:
பெருந்துறை நகரில், ஒரே வளாகமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளது. அங்கு வரும் மக்கள் பயன்பாட்டுக்கு, பொது கழிப்பிட வசதியில்லை. அதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாசில்தார் அலுவலகம் அருகில், மாற்று திறனாளிகளுக்கு, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது மக்கள் பயன்பட்டுக்கு திறந்து விடாமல், பல மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர்.
பெருந்துறை நகரில் கிளை கருவூலகம், சார்பு நீதிமன்றம், கிளை சிறை சாலை, போலீஸ் ஸ்டேஷன், நடுவர் நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், தொகுதி அரசு தேர்தல் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும், ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மேலும், அருகில் வட்ட வழங்கல் அலுவலகம், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பஸ் ஸ்டாப் உள்ளது.
இந்த அரசு அலுவலகங்களை நாடி தினமும், நூற்றுக்கணக்கான மக்கள், பெருந்துறை தொகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து, செல்கின்றனர். பல்வேறு பணிக்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள், சிறுநீர் கழிக்க, கழிப்பிட வசதியில்லாமல், நாள் முழுக்க தடுமாறுகின்றனர். இதில் பெண்கள் படும்பாடு சொல்ல முடியாது.
தாசில்தார் அலுவலகம் அருகில் மாற்று திறனாளிகளுக்கு, அரசு சார்பில் புதிதாக, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை திறக்காமல், பூட்டி வைத்துள்ளனர். மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், என்பது மக்கள் கோரிக்கையாகும்.
கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மேலும் ஒரு பொது கழிப்பிடம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டி, மக்கள் அவதியை போக்க வேண்டும், என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.
Thanks to 

No comments:

Post a Comment