FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, January 27, 2014

மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடம் தாசில்தார் அலுவலகம் அருகே வீண்

 26.01.2014 பெருந்துறை:
பெருந்துறை நகரில், ஒரே வளாகமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளது. அங்கு வரும் மக்கள் பயன்பாட்டுக்கு, பொது கழிப்பிட வசதியில்லை. அதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாசில்தார் அலுவலகம் அருகில், மாற்று திறனாளிகளுக்கு, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அது மக்கள் பயன்பட்டுக்கு திறந்து விடாமல், பல மாதங்களாக பூட்டி வைத்துள்ளனர்.
பெருந்துறை நகரில் கிளை கருவூலகம், சார்பு நீதிமன்றம், கிளை சிறை சாலை, போலீஸ் ஸ்டேஷன், நடுவர் நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், தொகுதி அரசு தேர்தல் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும், ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மேலும், அருகில் வட்ட வழங்கல் அலுவலகம், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பஸ் ஸ்டாப் உள்ளது.
இந்த அரசு அலுவலகங்களை நாடி தினமும், நூற்றுக்கணக்கான மக்கள், பெருந்துறை தொகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து, செல்கின்றனர். பல்வேறு பணிக்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள், சிறுநீர் கழிக்க, கழிப்பிட வசதியில்லாமல், நாள் முழுக்க தடுமாறுகின்றனர். இதில் பெண்கள் படும்பாடு சொல்ல முடியாது.
தாசில்தார் அலுவலகம் அருகில் மாற்று திறனாளிகளுக்கு, அரசு சார்பில் புதிதாக, ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை திறக்காமல், பூட்டி வைத்துள்ளனர். மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், என்பது மக்கள் கோரிக்கையாகும்.
கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மேலும் ஒரு பொது கழிப்பிடம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டி, மக்கள் அவதியை போக்க வேண்டும், என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.
Thanks to 

No comments:

Post a Comment