FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

11.01.2014,
காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவியை மீண்டும் பல்கலையில் சேர்க்க வலியுறுத்திமதுரையில் உண்ணாவிர தப் போராட்டம் நடை பெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மாணவி முனைவர் பி.ஜே.ஈஸ்வரி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்களை பல்கலையிலிருந்து நீக்கியதை ரத்து செய்ய வேண்டும். மாண வர்களுக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட கடும்நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்.

மனிதாபிமானமற்ற முறையில் சர்வாதிகாரமாக நிர்வாகம் நடத்தும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை காளவாசலில் நடைபெற்ற உண்ணாவிர தத்திற்கு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் ஆர்.வெற்றிவேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.அரவிந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.லாசர்போராட்டத்தை துவக்கிவைத்தார். மாநிலச்செய லாளர் எஸ்.நம்புராஜன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு இணை அமைப்பாளர் பி.விஜயகுமார், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், பொன்.கிருஷ்ணன் (சிஐடியு), செல்லக்கண்ணு (விவசாயிகள் சங்கம்), வி.பூமிநாதன் (விதொச), வி.உமாமகேசுவரன் (வாலிபர் சங்கம்), எம்.கண்ணன் (மாணவர் சங்கம்) ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment