FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

11.01.2014,
காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவியை மீண்டும் பல்கலையில் சேர்க்க வலியுறுத்திமதுரையில் உண்ணாவிர தப் போராட்டம் நடை பெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மாணவி முனைவர் பி.ஜே.ஈஸ்வரி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்களை பல்கலையிலிருந்து நீக்கியதை ரத்து செய்ய வேண்டும். மாண வர்களுக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட கடும்நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்.

மனிதாபிமானமற்ற முறையில் சர்வாதிகாரமாக நிர்வாகம் நடத்தும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை காளவாசலில் நடைபெற்ற உண்ணாவிர தத்திற்கு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் ஆர்.வெற்றிவேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.அரவிந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.லாசர்போராட்டத்தை துவக்கிவைத்தார். மாநிலச்செய லாளர் எஸ்.நம்புராஜன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு இணை அமைப்பாளர் பி.விஜயகுமார், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், பொன்.கிருஷ்ணன் (சிஐடியு), செல்லக்கண்ணு (விவசாயிகள் சங்கம்), வி.பூமிநாதன் (விதொச), வி.உமாமகேசுவரன் (வாலிபர் சங்கம்), எம்.கண்ணன் (மாணவர் சங்கம்) ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment