FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

11.01.2014,
காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவியை மீண்டும் பல்கலையில் சேர்க்க வலியுறுத்திமதுரையில் உண்ணாவிர தப் போராட்டம் நடை பெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மாணவி முனைவர் பி.ஜே.ஈஸ்வரி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்களை பல்கலையிலிருந்து நீக்கியதை ரத்து செய்ய வேண்டும். மாண வர்களுக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட கடும்நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்.

மனிதாபிமானமற்ற முறையில் சர்வாதிகாரமாக நிர்வாகம் நடத்தும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை காளவாசலில் நடைபெற்ற உண்ணாவிர தத்திற்கு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் ஆர்.வெற்றிவேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.அரவிந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.லாசர்போராட்டத்தை துவக்கிவைத்தார். மாநிலச்செய லாளர் எஸ்.நம்புராஜன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு இணை அமைப்பாளர் பி.விஜயகுமார், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், பொன்.கிருஷ்ணன் (சிஐடியு), செல்லக்கண்ணு (விவசாயிகள் சங்கம்), வி.பூமிநாதன் (விதொச), வி.உமாமகேசுவரன் (வாலிபர் சங்கம்), எம்.கண்ணன் (மாணவர் சங்கம்) ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment