FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

11.01.2014,
காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவியை மீண்டும் பல்கலையில் சேர்க்க வலியுறுத்திமதுரையில் உண்ணாவிர தப் போராட்டம் நடை பெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மாணவி முனைவர் பி.ஜே.ஈஸ்வரி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்களை பல்கலையிலிருந்து நீக்கியதை ரத்து செய்ய வேண்டும். மாண வர்களுக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட கடும்நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும்.

மனிதாபிமானமற்ற முறையில் சர்வாதிகாரமாக நிர்வாகம் நடத்தும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை காளவாசலில் நடைபெற்ற உண்ணாவிர தத்திற்கு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் ஆர்.வெற்றிவேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.அரவிந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.லாசர்போராட்டத்தை துவக்கிவைத்தார். மாநிலச்செய லாளர் எஸ்.நம்புராஜன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழு இணை அமைப்பாளர் பி.விஜயகுமார், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், பொன்.கிருஷ்ணன் (சிஐடியு), செல்லக்கண்ணு (விவசாயிகள் சங்கம்), வி.பூமிநாதன் (விதொச), வி.உமாமகேசுவரன் (வாலிபர் சங்கம்), எம்.கண்ணன் (மாணவர் சங்கம்) ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment