FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

111
 
திருப்பூர் 06.01.2014,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், விழிப்புணர்வு முகாம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் நல உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழக மேற்கு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம்ஆகியோர் பேசினர்.விழாவில் உடுமலை, அவினாசி, காங்கயம், பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வீடு இல்லாத 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்படும் வங்கிக்கடன் தொகைக்கு ஜாமீன் கேட்கும் விதியை தளர்த்த வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரே பஸ்சில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பொது கழிப்பிடங்கள் நடத்தும் உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீடு இல்லாத 1,500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment