FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

111
 
திருப்பூர் 06.01.2014,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், விழிப்புணர்வு முகாம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் நல உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழக மேற்கு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம்ஆகியோர் பேசினர்.விழாவில் உடுமலை, அவினாசி, காங்கயம், பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வீடு இல்லாத 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்படும் வங்கிக்கடன் தொகைக்கு ஜாமீன் கேட்கும் விதியை தளர்த்த வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரே பஸ்சில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பொது கழிப்பிடங்கள் நடத்தும் உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீடு இல்லாத 1,500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment