FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

111
 
திருப்பூர் 06.01.2014,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், விழிப்புணர்வு முகாம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் நல உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழக மேற்கு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம்ஆகியோர் பேசினர்.விழாவில் உடுமலை, அவினாசி, காங்கயம், பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வீடு இல்லாத 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்படும் வங்கிக்கடன் தொகைக்கு ஜாமீன் கேட்கும் விதியை தளர்த்த வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரே பஸ்சில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பொது கழிப்பிடங்கள் நடத்தும் உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீடு இல்லாத 1,500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment