FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 30, 2014

பஸ் பாஸ்: மாற்றுத் திறனாளிகள் தவிப்பு

29.01.2014, மதுரை :
பஸ் பாஸ் மற்றும் ரயில் கட்டண சலுகைக்கு, டாக்டரின் கையெழுத்து பெறுவதற்காக, மாற்றுத் திறனாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மதுரை கோச்சடையைச் சேர்ந்த பாக்கியத்தின் மகன் வாசு, 10. பிறவியிலேயே வளைந்த கால்களை உடைய இவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக சான்று உள்ளது. பஸ், ரயில்களில் பயணம் செய்வதற்கு துணையாக ஒருத்தர் உடன் செல்வதற்கான, விண்ணப்ப படிவத்தில் டாக்டர் கையெழுத்திற்காக, தாயும், மகனும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

அங்குள்ள டாக்டர், மதியம் 2 மணிக்கு மேல் கையெழுத்து இடுகிறேன் என, அனுப்பியதால், காலை 8 மணியிலிருந்து மதியம் 1.45 மணி வரை காத்திருந்தனர். அதன்பின் பணியாளர்கள் உதவியுடன், உதவி நிலைய மருத்துவ அலுவலரிடம் கையெழுத்து பெற்றனர்.

டாக்டர்கள் கூறுகையில்,''இந்த சான்றிதழில் கையெழுத்திடுவதற்கு, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரே போதும். துவரிமானில் அவ்வசதி உள்ளது. அடையாள அட்டையும், ஊனத்திற்கான சான்றிதழும் இருக்கும் போது, டாக்டர்கள் கையெழுத்திட தயங்குவது வேதனையாக உள்ளது,'' என்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை மட்டும் வழங்கினால் போதுமென நினைக்கின்றனர்.

பஸ் பாஸ் மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டால் கூட, யாரை அணுகுவதென குறிப்பிடவில்லை.

போன் எண்ணும் இல்லாததால், பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள், மதுரை அரசு மருத்துவமனையில், மணிக்கணக்கில் பரிதாபமாக காத்திருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள், அவர்கள் பெற்றோர்களின் நிலை கருதி, அனைத்து வசதிகளையும், கலெக்டர் அலுவலகத்தில் பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Thanks to Dinamalar

No comments:

Post a Comment