FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 30, 2014

பஸ் பாஸ்: மாற்றுத் திறனாளிகள் தவிப்பு

29.01.2014, மதுரை :
பஸ் பாஸ் மற்றும் ரயில் கட்டண சலுகைக்கு, டாக்டரின் கையெழுத்து பெறுவதற்காக, மாற்றுத் திறனாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மதுரை கோச்சடையைச் சேர்ந்த பாக்கியத்தின் மகன் வாசு, 10. பிறவியிலேயே வளைந்த கால்களை உடைய இவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக சான்று உள்ளது. பஸ், ரயில்களில் பயணம் செய்வதற்கு துணையாக ஒருத்தர் உடன் செல்வதற்கான, விண்ணப்ப படிவத்தில் டாக்டர் கையெழுத்திற்காக, தாயும், மகனும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

அங்குள்ள டாக்டர், மதியம் 2 மணிக்கு மேல் கையெழுத்து இடுகிறேன் என, அனுப்பியதால், காலை 8 மணியிலிருந்து மதியம் 1.45 மணி வரை காத்திருந்தனர். அதன்பின் பணியாளர்கள் உதவியுடன், உதவி நிலைய மருத்துவ அலுவலரிடம் கையெழுத்து பெற்றனர்.

டாக்டர்கள் கூறுகையில்,''இந்த சான்றிதழில் கையெழுத்திடுவதற்கு, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரே போதும். துவரிமானில் அவ்வசதி உள்ளது. அடையாள அட்டையும், ஊனத்திற்கான சான்றிதழும் இருக்கும் போது, டாக்டர்கள் கையெழுத்திட தயங்குவது வேதனையாக உள்ளது,'' என்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை மட்டும் வழங்கினால் போதுமென நினைக்கின்றனர்.

பஸ் பாஸ் மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டால் கூட, யாரை அணுகுவதென குறிப்பிடவில்லை.

போன் எண்ணும் இல்லாததால், பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள், மதுரை அரசு மருத்துவமனையில், மணிக்கணக்கில் பரிதாபமாக காத்திருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள், அவர்கள் பெற்றோர்களின் நிலை கருதி, அனைத்து வசதிகளையும், கலெக்டர் அலுவலகத்தில் பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Thanks to Dinamalar

No comments:

Post a Comment