FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, January 12, 2014

"தமிழ்நாட்டில் காதுகேளாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவப் பேருரை விழாவில் (இடமிருந்து) டாக்டர் மோகன் காமேஸ்வரன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்து, இணை வேந்தர் பி. தங்கராஜு, பதிவாளர் என். சேதுராமன்.

தாம்பரம், 09 January 2014
இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் காதுகேளாதோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அத்தை, மாமன் உறவு முறை திருமணப் பழக்கம்தான் காரணம் என்று சென்னை காது, மூக்கு, தொண்டை ஆய்வு மையம் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற செவித்திறன் குறைபாடு குறித்த மருத்துவ சிறப்புப் பேருரை விழாவில் அவர் மேலும் பேசியது:

உலகில் செவித்திறன் குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கும், இந்தியாவில் ஆயிரத்தில் 3 பேருக்கும், தமிழ்நாட்டில் ஆயிரத்தில் 6 பேருக்கும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அத்தை, மாமன் உறவில் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு காது கேளாமை குறைபாடு அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். காது கேளாமைக் குறைபாடு பற்றி கண்டறியவும், உடனடியாக உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் போதிய பரிசோதனை மையங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகள்,மருத்துவக் கல்லூரிகள் சேவை நோக்குடன் மாவட்ட அளவில் கிராமங்களைத் தத்தெடுத்து மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உதவுவதன் மூலம் போலியோ நோயை அறவே ஒழித்து இருப்பது போன்று காது கேளாமை குறைபாட்டையும் ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். காது கேளாமை குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பேசும்போது, எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது அருகில் உள்ள சுமார் 40 கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. டாக்டர் மோகன் காமேஸ்வரனின் வேண்டுகோளை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு

இலவச மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை வழங்க எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தயாராக உள்ளது என்றார். விழாவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பி.தங்கராஜு, பதிவாளர் என்.சேதுராமன், மருத்துவக்கல்லூரி டீன் ஜேம்ஸ் பாண்டியன், துறைத்தலைவர் கே.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment