FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, January 12, 2014

"தமிழ்நாட்டில் காதுகேளாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவப் பேருரை விழாவில் (இடமிருந்து) டாக்டர் மோகன் காமேஸ்வரன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்து, இணை வேந்தர் பி. தங்கராஜு, பதிவாளர் என். சேதுராமன்.

தாம்பரம், 09 January 2014
இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் காதுகேளாதோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அத்தை, மாமன் உறவு முறை திருமணப் பழக்கம்தான் காரணம் என்று சென்னை காது, மூக்கு, தொண்டை ஆய்வு மையம் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற செவித்திறன் குறைபாடு குறித்த மருத்துவ சிறப்புப் பேருரை விழாவில் அவர் மேலும் பேசியது:

உலகில் செவித்திறன் குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கும், இந்தியாவில் ஆயிரத்தில் 3 பேருக்கும், தமிழ்நாட்டில் ஆயிரத்தில் 6 பேருக்கும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அத்தை, மாமன் உறவில் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு காது கேளாமை குறைபாடு அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். காது கேளாமைக் குறைபாடு பற்றி கண்டறியவும், உடனடியாக உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் போதிய பரிசோதனை மையங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகள்,மருத்துவக் கல்லூரிகள் சேவை நோக்குடன் மாவட்ட அளவில் கிராமங்களைத் தத்தெடுத்து மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உதவுவதன் மூலம் போலியோ நோயை அறவே ஒழித்து இருப்பது போன்று காது கேளாமை குறைபாட்டையும் ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். காது கேளாமை குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பேசும்போது, எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது அருகில் உள்ள சுமார் 40 கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. டாக்டர் மோகன் காமேஸ்வரனின் வேண்டுகோளை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு

இலவச மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை வழங்க எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தயாராக உள்ளது என்றார். விழாவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பி.தங்கராஜு, பதிவாளர் என்.சேதுராமன், மருத்துவக்கல்லூரி டீன் ஜேம்ஸ் பாண்டியன், துறைத்தலைவர் கே.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment