FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகை: கோவை கலெக்டர் வழங்கினார்

கோவை, ஜன. 29–

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பல்வேறு சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்விக் கடன், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் பெற்றுக் கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள்

கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தீத்திபாளையம் சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி ரஞ்சிதாவின குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர். முருகன், தனித் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் வெங்கடாச்சலம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சி) செல்வம், உதவி இயக்குநர் (பேரூராட்சி) திருஞானம், மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Maalaimalar

No comments:

Post a Comment