FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகை: கோவை கலெக்டர் வழங்கினார்

கோவை, ஜன. 29–

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பல்வேறு சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்விக் கடன், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் பெற்றுக் கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள்

கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தீத்திபாளையம் சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி ரஞ்சிதாவின குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர். முருகன், தனித் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் வெங்கடாச்சலம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சி) செல்வம், உதவி இயக்குநர் (பேரூராட்சி) திருஞானம், மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Maalaimalar

No comments:

Post a Comment