FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 30, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகை: கோவை கலெக்டர் வழங்கினார்

கோவை, ஜன. 29–

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பல்வேறு சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்விக் கடன், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் பெற்றுக் கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள்

கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலைகளையும், தீத்திபாளையம் சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி ரஞ்சிதாவின குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர். முருகன், தனித் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் வெங்கடாச்சலம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சி) செல்வம், உதவி இயக்குநர் (பேரூராட்சி) திருஞானம், மாவட்ட கல்வி அலுவலர் கன்னிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Maalaimalar

No comments:

Post a Comment