FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, January 1, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு

01.01.2014, விருதுநகர்:
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு:
பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலி பணியிடங்களிலும், இனிமேல் ஏற்படக்கூடிய காலி பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்விற்கான சிறப்பு பயிற்சிக்கு திட்டமிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரின் மையப்பகுதியில் அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் மையத்தை தேர்ந்தெடுத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் பார்வையற்றோர் பயன்படுத்த ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 50 நபர்களை கொண்டு பயிற்சி நடத்துவதற்குரிய இரண்டு அறைகள் இருக்குமாறு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஈரோடு, விழுப்புரம், வேலு£ர், கோயம்புத்து£ர், சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற பெரிய மாவட்டங்களில் மூன்று அறைகள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தின் பெயரை அனைத்து நிறுவன முதல்வர்களும் ஜன. 6ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மையத்தில் 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுநகர் எஸ்எஸ் சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளியில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment