FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, January 24, 2014

காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

23.01.2014, புதுவை,
காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எஸ்எம்எஸ் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கம் சார்பில் புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காது கேளாதோர் கூட்டுறவு அமைப்புத் தலைவர் சரவணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க துணைத்தலைவர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இதுகுறித்து புதுவை காதுகேளாதோர் கூட்டுறவு அமைப்பு தலைவர் சரவணன் கூறியது:

செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களும், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவை சலுகைக் கட்டணத்தில் எஸ்எம்எஸ் அனுப்ப திட்டங்கள் வைத்துள்ளன.

ஒரு தொலைப்பேசி உரையாடலை, 20 எஸ்எம்எஸ்க்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் தெரிவிக்க வேண்டிய சூழலில், ஒரு நாளில் ஒரு எண்ணில் இருந்து 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கொண்டு வந்தது.

இதுதவிர பண்டிகை காலங்களில் ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நடவடிக்கையை நீக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் டிராய் அமைப்புக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இதற்கு ஒரு தீர்வு காணும் வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment