FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 24, 2014

காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

23.01.2014, புதுவை,
காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எஸ்எம்எஸ் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கம் சார்பில் புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காது கேளாதோர் கூட்டுறவு அமைப்புத் தலைவர் சரவணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க துணைத்தலைவர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இதுகுறித்து புதுவை காதுகேளாதோர் கூட்டுறவு அமைப்பு தலைவர் சரவணன் கூறியது:

செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களும், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவை சலுகைக் கட்டணத்தில் எஸ்எம்எஸ் அனுப்ப திட்டங்கள் வைத்துள்ளன.

ஒரு தொலைப்பேசி உரையாடலை, 20 எஸ்எம்எஸ்க்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் தெரிவிக்க வேண்டிய சூழலில், ஒரு நாளில் ஒரு எண்ணில் இருந்து 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கொண்டு வந்தது.

இதுதவிர பண்டிகை காலங்களில் ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நடவடிக்கையை நீக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் டிராய் அமைப்புக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இதற்கு ஒரு தீர்வு காணும் வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment