FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 23, 2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேனி, -20.01.2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 70 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்குள் மக்கள் மனு கொடுக்க செல்லும் வாசல் பகுதியில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கோஷம் எழுப்பியடி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகளை கூட்டரங்கை நோக்கி வீசி எறிந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சிலர் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் 6 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

கூட்டரங்கில் இருந்த மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமியை மாற்றுத்திறனாளிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கூறு கையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி அடையாள அட்டையை தவிர எந்தவித நலத்திட்டமும் கிடைக்கவில்லை. தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, தொழிற்கடன், வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும். தாட்கோவில் கடன் பெற முயன்றால் அதி காரிகள் எங்களை வேண்டா வெறுப்புடன் பார்க்கிறார்கள். அரசு வழங்கும் நலத்திட்டங்களை தடைகள் இன்றி எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment