FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, January 23, 2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேனி, -20.01.2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 70 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்குள் மக்கள் மனு கொடுக்க செல்லும் வாசல் பகுதியில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கோஷம் எழுப்பியடி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகளை கூட்டரங்கை நோக்கி வீசி எறிந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சிலர் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் 6 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

கூட்டரங்கில் இருந்த மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமியை மாற்றுத்திறனாளிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கூறு கையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி அடையாள அட்டையை தவிர எந்தவித நலத்திட்டமும் கிடைக்கவில்லை. தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, தொழிற்கடன், வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும். தாட்கோவில் கடன் பெற முயன்றால் அதி காரிகள் எங்களை வேண்டா வெறுப்புடன் பார்க்கிறார்கள். அரசு வழங்கும் நலத்திட்டங்களை தடைகள் இன்றி எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment