FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, January 23, 2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேனி, -20.01.2014

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசி எறிந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 70 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்குள் மக்கள் மனு கொடுக்க செல்லும் வாசல் பகுதியில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கோஷம் எழுப்பியடி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு தங்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகளை கூட்டரங்கை நோக்கி வீசி எறிந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சிலர் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் 6 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை

கூட்டரங்கில் இருந்த மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமியை மாற்றுத்திறனாளிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் கூறு கையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி அடையாள அட்டையை தவிர எந்தவித நலத்திட்டமும் கிடைக்கவில்லை. தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, தொழிற்கடன், வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும். தாட்கோவில் கடன் பெற முயன்றால் அதி காரிகள் எங்களை வேண்டா வெறுப்புடன் பார்க்கிறார்கள். அரசு வழங்கும் நலத்திட்டங்களை தடைகள் இன்றி எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment