FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, January 8, 2014

ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக்கூடாது கலெக்டர் பேச்சு

08.01.2014, பெரம்பலூர், :
ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக் கூடாது என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டார்.

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் தரேஸ் அஹமது பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1862 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே, 15 லட்சத்து, 37ஆயிரத்து, 400 மதிப்பிலான நலத் திட்டஉதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உடல் அளவில் ஏற்பட்ட குறைபாடுகளை தடையாகக் கருதாமல் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான வழிகளைக் கண்டறிந்து முன்னேற வேண்டும். உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்த மிகப் பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு மாற்றுத்திறனாளியாவார்.

மேலும், விளையாட்டு, கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். எனவே ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மனம் தளராதீர்கள் என்றார்.
விழாவில் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய் தளங்களை அமைக்க உத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைமூலம் 10 பேருக்கு ரூ5.40 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், 25 பேருக்கு ரூ1.08 லட்சம் மதிப்பிலான காது கேட்கப் பயன்படுத்தும் கருவி, ஒருவருக்கு ரூ. 90ஆயிரம் மதிப்பிலான செயற்கை கை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு டிஆர்ஓ சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் சேகர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மருதை ராஜ், வெண்ணிலா, ஜெயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சுதாதேவி, இந்தோ அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முகமது உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment