FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 8, 2014

ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக்கூடாது கலெக்டர் பேச்சு

08.01.2014, பெரம்பலூர், :
ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக் கூடாது என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டார்.

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் தரேஸ் அஹமது பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1862 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே, 15 லட்சத்து, 37ஆயிரத்து, 400 மதிப்பிலான நலத் திட்டஉதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உடல் அளவில் ஏற்பட்ட குறைபாடுகளை தடையாகக் கருதாமல் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான வழிகளைக் கண்டறிந்து முன்னேற வேண்டும். உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்த மிகப் பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு மாற்றுத்திறனாளியாவார்.

மேலும், விளையாட்டு, கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். எனவே ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மனம் தளராதீர்கள் என்றார்.
விழாவில் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய் தளங்களை அமைக்க உத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைமூலம் 10 பேருக்கு ரூ5.40 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், 25 பேருக்கு ரூ1.08 லட்சம் மதிப்பிலான காது கேட்கப் பயன்படுத்தும் கருவி, ஒருவருக்கு ரூ. 90ஆயிரம் மதிப்பிலான செயற்கை கை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு டிஆர்ஓ சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் சேகர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மருதை ராஜ், வெண்ணிலா, ஜெயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சுதாதேவி, இந்தோ அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முகமது உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment