FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, January 8, 2014

ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக்கூடாது கலெக்டர் பேச்சு

08.01.2014, பெரம்பலூர், :
ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக் கூடாது என்று பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டார்.

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் தரேஸ் அஹமது பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1862 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே, 15 லட்சத்து, 37ஆயிரத்து, 400 மதிப்பிலான நலத் திட்டஉதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உடல் அளவில் ஏற்பட்ட குறைபாடுகளை தடையாகக் கருதாமல் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான வழிகளைக் கண்டறிந்து முன்னேற வேண்டும். உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்த மிகப் பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு மாற்றுத்திறனாளியாவார்.

மேலும், விளையாட்டு, கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். எனவே ஊனத்தை ஒரு தடையாக நினைத்து மனம் தளராதீர்கள் என்றார்.
விழாவில் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய் தளங்களை அமைக்க உத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைமூலம் 10 பேருக்கு ரூ5.40 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், 25 பேருக்கு ரூ1.08 லட்சம் மதிப்பிலான காது கேட்கப் பயன்படுத்தும் கருவி, ஒருவருக்கு ரூ. 90ஆயிரம் மதிப்பிலான செயற்கை கை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு டிஆர்ஓ சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் சேகர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மருதை ராஜ், வெண்ணிலா, ஜெயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சுதாதேவி, இந்தோ அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முகமது உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment