FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, January 3, 2014

கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

03.01.2014 திருவண்ணாமலை,

அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை அடுத்த நார்த்தாம்பூண்டியில் 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாற்றுத்தினாளிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீர் என்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.

அரசு சலுகைகள்
அப்போது நார்த்தாம் பூண்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அரசு வழங்கும் சலுகைகளை வழங்க வேண் டும்.

மேலும் அரசு வழங்கும் விலையில்லா ஆடு, மாடுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Thanks to

No comments:

Post a Comment