FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 5, 2014

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுகோள்

04.01.2014, அரியலூர், -

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

கண் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய படிவம் பெற்று 28.02.2014க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எழுதபடிக்க தெரிந்தவர்கள் (கண் பார்வையற்றவர்கள் எழுத படிக்க தேவையில்லை) முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொது வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன் பெறுபவர்களும், பெற்ற வர்களும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெறலாம்.

உதவித்தொகை
இத்திட்டத்தின் கீழ் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வும் அதற்கு கீழ் உள்ள கல்வித் தகுதிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும். மேல் நிலை (பன்னிரண்டாம் வகுப்பு) கல்வித் தகுதி தேர்வுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.375 வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.450 வழங்கப்படும்.

தகுதிகள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும் அதாவது 31.3.2013 அன்றோ அல்லது அதற்கும் முன்னதாக பதிவு செய்தவராக இருக்கலாம்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 31.3.2014 அன்று 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.

வருமானம்
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயில்பவராக இருக்கலாம்.

மனுதாரர் சுயமாக எதுவும் தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்ப வராகவோ இருத்தல் கூடாது

புதிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்கள் 28.02.2014 வரை அலுவலக வேலை நாளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டும் பெறப்படும். மனுதாரர் விண்ணப்பபடிவம் பெற்றுக் கொள்வதற்கு பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள். மாற்றுச் சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங் களுடன் வருகை தர வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Thanks to 

No comments:

Post a Comment