FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 5, 2014

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுகோள்

04.01.2014, அரியலூர், -

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

கண் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய படிவம் பெற்று 28.02.2014க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எழுதபடிக்க தெரிந்தவர்கள் (கண் பார்வையற்றவர்கள் எழுத படிக்க தேவையில்லை) முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொது வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன் பெறுபவர்களும், பெற்ற வர்களும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெறலாம்.

உதவித்தொகை
இத்திட்டத்தின் கீழ் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வும் அதற்கு கீழ் உள்ள கல்வித் தகுதிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும். மேல் நிலை (பன்னிரண்டாம் வகுப்பு) கல்வித் தகுதி தேர்வுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.375 வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.450 வழங்கப்படும்.

தகுதிகள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும் அதாவது 31.3.2013 அன்றோ அல்லது அதற்கும் முன்னதாக பதிவு செய்தவராக இருக்கலாம்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 31.3.2014 அன்று 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது.

வருமானம்
மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயில்பவராக இருக்கலாம்.

மனுதாரர் சுயமாக எதுவும் தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்ப வராகவோ இருத்தல் கூடாது

புதிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்கள் 28.02.2014 வரை அலுவலக வேலை நாளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டும் பெறப்படும். மனுதாரர் விண்ணப்பபடிவம் பெற்றுக் கொள்வதற்கு பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள். மாற்றுச் சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங் களுடன் வருகை தர வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Thanks to 

No comments:

Post a Comment