FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 23, 2014

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை செல்பேசி நிறுவனங்கள் தளர்த்த கோரி மாற்று திறனாளிகளின் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

 
22.01.2014, புதுச்சேரி
காதுகேளாதோர் வாய்ப்பேசமுடியாதோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள குறுந்செய்தி அனுப்பும் வசதியை தடுக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 குறுந்செய்தி மட்டுமே அனுப்பமுடியும் என்ற பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்பேசி நிறுவனங்களின் கட்டுபாட்டை உடனடியாக தளர்த்த வேண்டும்.சலுகை கட்டணத்தில் குறுஞ்செய்தி அனுப்ப திட்டங்கள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் இச்சலுகை மறுக்கப்பட்டு முழு கட்டணம் என்ற பெயரில் குறுஞ்செய்திக்கு கூடுதல்தொகை வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.ஒரு நிமிட தொலைப்போசி உரையாடலை காதுகேளாதவாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் குறுஞ்செய்தி மூலம் உரையாடினால்,குறைந்தபட்சம் 20குறுஞ்செய்திகள் அனுப்ப நேரிடுகிறது எனவே முழுகட்டணத்தை உடனே திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காதுகேளாதோர் கூட்டுறவு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.லட்சுமனன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று பேசினார்.புதுச்சேரி தலைவர் ராஜாங்கம்,புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு செயலாளர் பாலமுருகன்,எல்ஐசி முகவர் சங்கத்தின் மாநில செயலாளர் ராம்ஜி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொஞ்சியப்பன் உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment