FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, January 27, 2014

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு இலவச ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

26.01.2014
கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகளில் மாணவ–மாணவியர், பணிக்கு செல்பவர் மற்றும் சுயதொழில் புரிபவர் என்ற முன்னுரிமையில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வருடத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின்படி மேற் குறிப்பிட்ட தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு மேற்படி பொது திட்டத்தின் கீழ் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது.

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்பும் இரண்டு கால்களும் செயல் இழந்த, ஊன்றுகோல் உதவியுடன் நடக்கக்கூடிய 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வழங்க ஏற்கனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

ஸ்கூட்டர் பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபாலிலோ அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி நிலையச்சான்று, பணிச்சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment