FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, January 27, 2014

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு இலவச ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

26.01.2014
கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகளில் மாணவ–மாணவியர், பணிக்கு செல்பவர் மற்றும் சுயதொழில் புரிபவர் என்ற முன்னுரிமையில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வருடத்திற்கு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின்படி மேற் குறிப்பிட்ட தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு மேற்படி பொது திட்டத்தின் கீழ் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது.

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்பும் இரண்டு கால்களும் செயல் இழந்த, ஊன்றுகோல் உதவியுடன் நடக்கக்கூடிய 18 வயது பூர்த்தி ஆன மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வழங்க ஏற்கனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

ஸ்கூட்டர் பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபாலிலோ அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி நிலையச்சான்று, பணிச்சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment