FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, January 14, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்

12.01.2014 பெரம்பலூர்,
மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, இரா.தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

மூன்று சக்கர சைக்கிள்கள்
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் .

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தரேஸ் அஹமது பேசிய தாவது:-
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்த வகை யில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு மூன்று சக்கர வண்டி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் ஊன்று கோல் வழங்கும் திட் டங்களின் கீழ் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.
இது போன்ற நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண் டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கலெக்டர்-எம்.எல்.ஏ.
அதனை தொடர்ந்து 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 960 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும், 16 நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 325 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 12 நபர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 940 மதிப்பிலான ஊன்று கோல்களையும் ஆக மொத்தம் 39 பேருக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக் டர் மற்றும் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி னர்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Daily Thanthi.

No comments:

Post a Comment