FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 14, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்

12.01.2014 பெரம்பலூர்,
மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, இரா.தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

மூன்று சக்கர சைக்கிள்கள்
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் .

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தரேஸ் அஹமது பேசிய தாவது:-
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்த வகை யில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு மூன்று சக்கர வண்டி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் ஊன்று கோல் வழங்கும் திட் டங்களின் கீழ் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.
இது போன்ற நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண் டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கலெக்டர்-எம்.எல்.ஏ.
அதனை தொடர்ந்து 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 960 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும், 16 நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 325 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 12 நபர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 940 மதிப்பிலான ஊன்று கோல்களையும் ஆக மொத்தம் 39 பேருக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக் டர் மற்றும் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி னர்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Daily Thanthi.

No comments:

Post a Comment