FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, January 14, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்

12.01.2014 பெரம்பலூர்,
மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, இரா.தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

மூன்று சக்கர சைக்கிள்கள்
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் .

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தரேஸ் அஹமது பேசிய தாவது:-
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்த வகை யில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு மூன்று சக்கர வண்டி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் ஊன்று கோல் வழங்கும் திட் டங்களின் கீழ் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.
இது போன்ற நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண் டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கலெக்டர்-எம்.எல்.ஏ.
அதனை தொடர்ந்து 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 960 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும், 16 நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 325 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 12 நபர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 940 மதிப்பிலான ஊன்று கோல்களையும் ஆக மொத்தம் 39 பேருக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக் டர் மற்றும் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி னர்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Thanks to Daily Thanthi.

No comments:

Post a Comment