FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, January 12, 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரைவு மசோதா: வெளியிடக் கோரிக்கை

சென்னை, 07 January 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட வரைவு மசோதா பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கூட்டமைப்பின் துணைத்தலைவர் தீபக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஐ.நா. சபையின் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1996-இல் சில மாற்றங்களை செய்து, அந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், ஐ.நா. சட்டத்தில் இடம்பெற்றிருந்த பல முக்கிய ஷரத்துக்கள், இந்த மசோதாவில் இடம்பெறவில்லை.

அதாவது மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வகையில் முழு சட்ட உரிமையைப் பெற ஐ.நா. சட்டம் வழிவகுக்கிறது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், மசோதா மீதான கருத்துக் கேட்பின்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவடைந்தபின்னர், வரைவு சட்ட மசோதாவில் சில மாற்றங்களை செய்து அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ÷ஆனால் திருத்தப்பட்ட வரைவு மசோதா இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனவே இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லையெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வரைவு மசோதா பெறப்பட்டு, அதனடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment