FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, January 12, 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரைவு மசோதா: வெளியிடக் கோரிக்கை

சென்னை, 07 January 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட வரைவு மசோதா பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கூட்டமைப்பின் துணைத்தலைவர் தீபக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஐ.நா. சபையின் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1996-இல் சில மாற்றங்களை செய்து, அந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், ஐ.நா. சட்டத்தில் இடம்பெற்றிருந்த பல முக்கிய ஷரத்துக்கள், இந்த மசோதாவில் இடம்பெறவில்லை.

அதாவது மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வகையில் முழு சட்ட உரிமையைப் பெற ஐ.நா. சட்டம் வழிவகுக்கிறது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், மசோதா மீதான கருத்துக் கேட்பின்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவடைந்தபின்னர், வரைவு சட்ட மசோதாவில் சில மாற்றங்களை செய்து அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ÷ஆனால் திருத்தப்பட்ட வரைவு மசோதா இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனவே இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லையெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வரைவு மசோதா பெறப்பட்டு, அதனடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment