FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, January 12, 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரைவு மசோதா: வெளியிடக் கோரிக்கை

சென்னை, 07 January 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட வரைவு மசோதா பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கூட்டமைப்பின் துணைத்தலைவர் தீபக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஐ.நா. சபையின் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1996-இல் சில மாற்றங்களை செய்து, அந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், ஐ.நா. சட்டத்தில் இடம்பெற்றிருந்த பல முக்கிய ஷரத்துக்கள், இந்த மசோதாவில் இடம்பெறவில்லை.

அதாவது மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வகையில் முழு சட்ட உரிமையைப் பெற ஐ.நா. சட்டம் வழிவகுக்கிறது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், மசோதா மீதான கருத்துக் கேட்பின்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவடைந்தபின்னர், வரைவு சட்ட மசோதாவில் சில மாற்றங்களை செய்து அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ÷ஆனால் திருத்தப்பட்ட வரைவு மசோதா இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனவே இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லையெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வரைவு மசோதா பெறப்பட்டு, அதனடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment