FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, January 12, 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரைவு மசோதா: வெளியிடக் கோரிக்கை

சென்னை, 07 January 2014

திருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட வரைவு மசோதா பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கூட்டமைப்பின் துணைத்தலைவர் தீபக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஐ.நா. சபையின் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஏற்கெனவே உள்ள மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1996-இல் சில மாற்றங்களை செய்து, அந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், ஐ.நா. சட்டத்தில் இடம்பெற்றிருந்த பல முக்கிய ஷரத்துக்கள், இந்த மசோதாவில் இடம்பெறவில்லை.

அதாவது மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வகையில் முழு சட்ட உரிமையைப் பெற ஐ.நா. சட்டம் வழிவகுக்கிறது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், மசோதா மீதான கருத்துக் கேட்பின்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவடைந்தபின்னர், வரைவு சட்ட மசோதாவில் சில மாற்றங்களை செய்து அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ÷ஆனால் திருத்தப்பட்ட வரைவு மசோதா இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனவே இந்த வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லையெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வரைவு மசோதா பெறப்பட்டு, அதனடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment