FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, January 3, 2014

216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சென்னை, 03 January 2014
மாற்றுத்திறனாளிகள் 216 பேருக்கு ரூ. 23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்,

ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் 3 பேருக்கும், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற 2 பேருக்கு ரூ. 1 லட்சமும், ரூ. 92 ஆயிரத்து 400 மதிப்பிலான கால் தாங்கிகள் 28 பேருக்கும், ரூ. 29 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கை அவயம் 2 பேருக்கும், ரூ. 77 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

ரூ. 12 லட்சம் மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள் 100 பேருக்கும் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான ரூ. 7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகை அனுமதி ஆணைகள் 61 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஆக மொத்தம் 216 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 90 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக தேசிய விருதினை பெற்றுள்ளது. அரசு செய்து வரும் இந்த உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்றார்.

இந்த விழாவில் அரசு செயலர் பி.சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் க.மணிவாசன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment