FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 3, 2014

216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சென்னை, 03 January 2014
மாற்றுத்திறனாளிகள் 216 பேருக்கு ரூ. 23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்,

ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் 3 பேருக்கும், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற 2 பேருக்கு ரூ. 1 லட்சமும், ரூ. 92 ஆயிரத்து 400 மதிப்பிலான கால் தாங்கிகள் 28 பேருக்கும், ரூ. 29 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கை அவயம் 2 பேருக்கும், ரூ. 77 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

ரூ. 12 லட்சம் மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள் 100 பேருக்கும் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான ரூ. 7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகை அனுமதி ஆணைகள் 61 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஆக மொத்தம் 216 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 90 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக தேசிய விருதினை பெற்றுள்ளது. அரசு செய்து வரும் இந்த உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்றார்.

இந்த விழாவில் அரசு செயலர் பி.சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் க.மணிவாசன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment