FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, January 3, 2014

216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சென்னை, 03 January 2014
மாற்றுத்திறனாளிகள் 216 பேருக்கு ரூ. 23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்,

ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் 3 பேருக்கும், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற 2 பேருக்கு ரூ. 1 லட்சமும், ரூ. 92 ஆயிரத்து 400 மதிப்பிலான கால் தாங்கிகள் 28 பேருக்கும், ரூ. 29 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கை அவயம் 2 பேருக்கும், ரூ. 77 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

ரூ. 12 லட்சம் மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள் 100 பேருக்கும் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான ரூ. 7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகை அனுமதி ஆணைகள் 61 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஆக மொத்தம் 216 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 90 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக தேசிய விருதினை பெற்றுள்ளது. அரசு செய்து வரும் இந்த உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்றார்.

இந்த விழாவில் அரசு செயலர் பி.சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் க.மணிவாசன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment