FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 3, 2014

216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சென்னை, 03 January 2014
மாற்றுத்திறனாளிகள் 216 பேருக்கு ரூ. 23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்,

ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் 3 பேருக்கும், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற 2 பேருக்கு ரூ. 1 லட்சமும், ரூ. 92 ஆயிரத்து 400 மதிப்பிலான கால் தாங்கிகள் 28 பேருக்கும், ரூ. 29 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கை அவயம் 2 பேருக்கும், ரூ. 77 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

ரூ. 12 லட்சம் மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள் 100 பேருக்கும் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான ரூ. 7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகை அனுமதி ஆணைகள் 61 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஆக மொத்தம் 216 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 90 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக தேசிய விருதினை பெற்றுள்ளது. அரசு செய்து வரும் இந்த உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்றார்.

இந்த விழாவில் அரசு செயலர் பி.சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் க.மணிவாசன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment