FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 2, 2014

கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ

02.01.2014 கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள், இளைஞர்களின் திரில் ஷோ நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் நெல்லை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை, கோவில்பட்டி ஆஸ்கர்- வி.வி.ஜே. கல்வி நிறுவனங்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்களின் திரில் ஷா நிகழ்ச்சி நடந்தது. உலகத்தில் இறைவன் படைப்பில் மனிதன் பிறப்பில் சில குறைபாடுகளுடன் பிறக்கிறான். குறைபாடுயுடன் பிறக்கின்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போல நம்மாலும் செயல்பட முடியாமல் உள்ளது என்று ஏக்கககளுடன் வாழ்கின்றன. சிலருக்கு கை கால்,கண் மற்றும் காது உள்ளிட்ட மனித உறுப்புக்கள் குறைபாடுகளுடன் இருப்பவர்கள் செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகளை பயன்படுத்தி மற்றவர்களை போல நாமும் செயல்படமுடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் பல தடைகளை தகாந்தெறிந்து வெற்றிகளை பெற்றவர்களும் இவ்வுலகில் உள்ளார்கள். கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ ஆனால் பிறப்பிலேயே இரண்டு கைகள் கால்கள் ஊணமாக பிறக்கின்ற குழந்தைகள் பிறர் உதவியுடன் தாங்களது அன்றா காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக சழுதாயத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்களும் தாங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் அருகே ஓரு கிராமத்தில் பிறந்த குழந்தை இரண்டு கைகள் மற்றும் கால்கள் சுருங்கியுள்ளது. அவரது குடும்பம் வறுமைகோட்டிற்கு உள்ளது. ஆரம்ப காலங்களில் இவரது தந்தை பல மருத்துவர்களிடம் தனது குழந்தையை காண்பித்து மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். இன்று குழந்தை 27வயது பெண்னாக இருந்தாலும் பார்ப்பதற்கு 5 மாத குழந்தை தரையில் படுத்து இருந்த எப்படி இருக்குமோ அதை போன்ற உள்ளது. இந்த குழந்தையை கடந்த 28வருடங்களாக அவரது குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களுக்கிடையே பாதுகாத்து வருகின்றனர். கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ இந்த பெண்னுக்கு உதவுவதற்காக நல்ல உள்ளங்கள் படைத்த நெல்லை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி உள்ள வி.வி.ஏ கல்வி நிறுவனங்கள் இனைத்து அந்த பெண்னுக்கு உதவும் வகையில் சமுதாயத்தில் உயர்ந்த உள்ளம் படைந்த தொழிலதிபர்களுடன் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் திரில் ஷோ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி அதன் முலம் வருகின்ற நிதியை அவர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பது மிகப் பெருமை உள்ளது. இது போன்ற நம் சமுதாயத்தில் நல்ல உள்ளமும் கருனை கொண்ட பெரியோர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளார்கள். அவர்களும் தாங்களால் முடிந்த பொருள் உதவியை அளிக்க முன்வரவேண்டும். கோவில்பட்டியில் நடைபெற்ற திரில ஷோ நிகழ்ச்சிக்கு ஆஸ்கர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தொழில் அதிபர் பெரியசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜீ திரில் ஷோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர், ஒற்றைக் காலுடன் நடனமாடிய காட்சி, மற்றொரு வாலிபர் டியூப் லைட்டுகளை உடைத்து தின்ற காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்தது. மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் இணைந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்.செ.ராஜீ ரூ.5 ஆயிரமும், முன்னாள் நகர செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ரூ.5 ஆயிரமும் ஜானகி அம்மாள் அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கினர். கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த சாகச நிகழ்ச்சியில், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியான திருமங்கலம் கப்பலூரைச் சேர்ந்த ராஜா மகள் ஐஸ்வர்யாவின் சிகிச்சைக்காக நிதி வழங்கப்பட்டது. அவர் கண் பார்வை பெற்ற நிலையில், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறினார். ஐஸ்வர்யாவின் உயர் கல்வி செலவை ஆஸ்கர் கல்வி நிறுவனம் ஏற்பதாக தாளாளர் சுப்புராஜ் தெரிவித்தார். உடல் வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியான திருமங்கலம் சாத்தன்குடியைச் சேர்ந்த தெய்வகுரு மகள் பிரேமலதாவின் (வயது 27) சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் மாற்றுத் திறனாளிகளின் சிகிச்சைக்காக நிதி வழங்கினர். ரோட்டரி சங்க மண்டல தலைவர் விநாயகா ரமேஷ், மைக்ரோ பாய்ண்ட் ஐ.டி.ஐ. தாளாளர் ஆம்ஸ்ட்ராங், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ் குமார், ரோட்டரி சங்க தலைவர் வீராசாமி, செயலாளர் ஜெயபிரகாஷ், நாராயணசாமி,ஜானகி அம்மாள் அறகட்டளை நிருவனர் ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை வின்சென்ட், ஆஸ்கர் கேட்ரிங் முதல்வர் அழகுமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Thanks to  One India..

No comments:

Post a Comment