FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, January 29, 2014

ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு உதவி

29.01.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில், ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம், ஏழை, எளியோர் மாற்றுத்திறனாளிகள், 500 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, உணவுதொழில் முன்னோடிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், தஞ்சை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியசர்மா தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடசுப்பு, மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட செயலாளர் சலீம் அக்பர் வரவேற்றார். இவ்விழாவில், கவுரவ தலைவர்கள் ராமதாஸ்ராவ், ரவி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், கலெக்டர் சுப்பையன், திருச்சி மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், ஏழை, எளியோயார் 500 பேருக்கு இலவச சீருடை, போர்வை, தட்டு, டம்ளர், மூன்று சக்கர சைக்கிள் உள்பட, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் சுப்பையன் பேசுகையில், ""உணவு சமைத்து, அளிக்கும் தொழில் உன்னதமானது. மக்களின் தேவை, எதிர்பார்ப்பு தற்கால சூழலில் அதிகமாக உள்ளது. போட்டி உலகமாக தற்போதைய சமுதாயம் மாறி வருகிறது. இச்சூழலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, அடுத்த கட்ட முன்னேற்ற படியை அடைய வேண்டும். மக்களுக்கு சேவை அடிப்படையில் பணியை தொடர வேண்டும்,'' என்றார். திருச்சி ஐ.ஜி., ராமசுப்பிரமணி பேசுகையில், ""பிற தொழிலாளரை விட ஹோட்டல் உரிமையாளர்கள், பொது சேவையை ஆற்றும் வகையில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில், வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். இவ்வகையில், வாடிக்கையாளர்கள் பாராட்டை பெறும் வகையில், உணவை சமைத்து, அளித்து சேவையாற்றுவோர் பலர் உள்ளனர். ஹோட்டல் தொழில் அதிகம்பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது,'' என்றார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை நகர ஹோட்டல்கள் சங்க தலைவர் பாண்டுரெங்கன், செயலாளர் முத்து உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில செயற்குழு தலைவர் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு தலைமையில் நடந்தது. விழாவை மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். நகர பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment