FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, January 29, 2014

ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு உதவி

29.01.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில், ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம், ஏழை, எளியோர் மாற்றுத்திறனாளிகள், 500 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, உணவுதொழில் முன்னோடிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், தஞ்சை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியசர்மா தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடசுப்பு, மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட செயலாளர் சலீம் அக்பர் வரவேற்றார். இவ்விழாவில், கவுரவ தலைவர்கள் ராமதாஸ்ராவ், ரவி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், கலெக்டர் சுப்பையன், திருச்சி மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், ஏழை, எளியோயார் 500 பேருக்கு இலவச சீருடை, போர்வை, தட்டு, டம்ளர், மூன்று சக்கர சைக்கிள் உள்பட, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் சுப்பையன் பேசுகையில், ""உணவு சமைத்து, அளிக்கும் தொழில் உன்னதமானது. மக்களின் தேவை, எதிர்பார்ப்பு தற்கால சூழலில் அதிகமாக உள்ளது. போட்டி உலகமாக தற்போதைய சமுதாயம் மாறி வருகிறது. இச்சூழலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, அடுத்த கட்ட முன்னேற்ற படியை அடைய வேண்டும். மக்களுக்கு சேவை அடிப்படையில் பணியை தொடர வேண்டும்,'' என்றார். திருச்சி ஐ.ஜி., ராமசுப்பிரமணி பேசுகையில், ""பிற தொழிலாளரை விட ஹோட்டல் உரிமையாளர்கள், பொது சேவையை ஆற்றும் வகையில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில், வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். இவ்வகையில், வாடிக்கையாளர்கள் பாராட்டை பெறும் வகையில், உணவை சமைத்து, அளித்து சேவையாற்றுவோர் பலர் உள்ளனர். ஹோட்டல் தொழில் அதிகம்பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது,'' என்றார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை நகர ஹோட்டல்கள் சங்க தலைவர் பாண்டுரெங்கன், செயலாளர் முத்து உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில செயற்குழு தலைவர் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு தலைமையில் நடந்தது. விழாவை மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். நகர பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment