FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 29, 2014

ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு உதவி

29.01.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில், ஹோட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம், ஏழை, எளியோர் மாற்றுத்திறனாளிகள், 500 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, உணவுதொழில் முன்னோடிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில், தஞ்சை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியசர்மா தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடசுப்பு, மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட செயலாளர் சலீம் அக்பர் வரவேற்றார். இவ்விழாவில், கவுரவ தலைவர்கள் ராமதாஸ்ராவ், ரவி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், கலெக்டர் சுப்பையன், திருச்சி மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், ஏழை, எளியோயார் 500 பேருக்கு இலவச சீருடை, போர்வை, தட்டு, டம்ளர், மூன்று சக்கர சைக்கிள் உள்பட, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் சுப்பையன் பேசுகையில், ""உணவு சமைத்து, அளிக்கும் தொழில் உன்னதமானது. மக்களின் தேவை, எதிர்பார்ப்பு தற்கால சூழலில் அதிகமாக உள்ளது. போட்டி உலகமாக தற்போதைய சமுதாயம் மாறி வருகிறது. இச்சூழலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, அடுத்த கட்ட முன்னேற்ற படியை அடைய வேண்டும். மக்களுக்கு சேவை அடிப்படையில் பணியை தொடர வேண்டும்,'' என்றார். திருச்சி ஐ.ஜி., ராமசுப்பிரமணி பேசுகையில், ""பிற தொழிலாளரை விட ஹோட்டல் உரிமையாளர்கள், பொது சேவையை ஆற்றும் வகையில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில், வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம். இவ்வகையில், வாடிக்கையாளர்கள் பாராட்டை பெறும் வகையில், உணவை சமைத்து, அளித்து சேவையாற்றுவோர் பலர் உள்ளனர். ஹோட்டல் தொழில் அதிகம்பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது,'' என்றார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை நகர ஹோட்டல்கள் சங்க தலைவர் பாண்டுரெங்கன், செயலாளர் முத்து உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில செயற்குழு தலைவர் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு தலைமையில் நடந்தது. விழாவை மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார். நகர பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment