FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 16, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா நிறைவேற்றப்படும்

புது தில்லி, 16 January 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மசோதா பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் "சமர்த் 2014' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோனியா காந்தி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுத் துறை நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதமாகவும், ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 1995-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை சமூக நீரோட்டத்துடன் அரசு இணைக்க வேண்டும். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.

அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும்.

அவர்களது சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அவர்களின் பிரச்னைகளை நாம் மருத்துவ ரீதியில் மட்டுமே அணுகுகிறோம். இதை நாம் மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கக் கூடாது. அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.

Thanks to

No comments:

Post a Comment