FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 16, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா நிறைவேற்றப்படும்

புது தில்லி, 16 January 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மசோதா பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் "சமர்த் 2014' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோனியா காந்தி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுத் துறை நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதமாகவும், ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 1995-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை சமூக நீரோட்டத்துடன் அரசு இணைக்க வேண்டும். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.

அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும்.

அவர்களது சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அவர்களின் பிரச்னைகளை நாம் மருத்துவ ரீதியில் மட்டுமே அணுகுகிறோம். இதை நாம் மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கக் கூடாது. அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.

Thanks to

No comments:

Post a Comment