FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 30, 2014

ஆரம்ப நிலைப் பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டை, சுண்டல் மற்றும் சத்துமாவுடன் கூடிய மதிய உணவு திட்டம் : சமூகநலத்துறை சார்பில் சென்னையில் தொடக்கம்

 
29.01.2014
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் ரூபாய் செலவில், ஆரம்ப நிலைபயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் சுண்டலுடன் மதிய உணவும், இணை உணவுக்கான நுண்ணூட்டச் சத்துமாவும் வழங்கும் திட்டம், சமூகநலத்துறை சார்பில் சென்னையில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 6 வயதிற்குட்பட்ட மாற்றத்திறனாளி குழந்தைளுக்கான 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் உள்ள குழந்தைளுக்கு நுண்ணூட்டச் சத்துமாவும் மதிய உணவும் வழங்கும் திட்டத்திற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 46 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து, செவித்திறன், பார்வைத்திறன், மனவளர்ச்சி குன்றிய சென்னையில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 5 ஆரம்பநிலைப் பயிற்சி மையங்களில் உள்ள 125 குழந்தைகளுக்கு மதிய உணவும், சத்துமாவையும், சமூகநலத்துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் திரு. சிவசங்கரன், மாநில ஆணையர் டாக்டர் மணிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இணை உணவான நுண்ணூட்டச் சத்துமாவும், முட்டை மற்றும் சுண்டலுடன் மதிய உணவும் குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் மதிய உணவும், இணை உணவுக்கான நுண்ணூட்டச்சத்து மாவும் வழங்கும் திட்டம், வரும் 3-ம் தேதி முதல் செயல்படதொடங்கும் என்றும், இதன்மூலம், 87 பயிற்சி மையங்களிலும் பயிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவதில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thanks to Jaya TV News

No comments:

Post a Comment