FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, January 29, 2014

போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளி

விருதுநகர், 29 January 2014

விருதுநகரில் போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளியை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(35). இவர் ஐ.டி.ஐ பயிற்சி பெற்றுள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமியுடன் ஆட்டோவில் லட்சுமி காலனியில் உள்ள எம்.பி அலுவலகத்திற்கு வேலைவாய்ப்புக் கேட்டு மனு அளிக்கச் சென்றார்களாம்.

அங்கு யாரும் இல்லாத காரணத்தால் ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இற்ங்கி சென்றுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆட்டோவில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பார்த்திபன் போலீஸாருடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கணவன் மனைவி என்பது தெரிந்தது.

பின்னர் அங்கிருந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுலைமான் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Thanks to

No comments:

Post a Comment