FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, January 29, 2014

போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளி

விருதுநகர், 29 January 2014

விருதுநகரில் போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளியை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(35). இவர் ஐ.டி.ஐ பயிற்சி பெற்றுள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமியுடன் ஆட்டோவில் லட்சுமி காலனியில் உள்ள எம்.பி அலுவலகத்திற்கு வேலைவாய்ப்புக் கேட்டு மனு அளிக்கச் சென்றார்களாம்.

அங்கு யாரும் இல்லாத காரணத்தால் ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இற்ங்கி சென்றுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆட்டோவில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பார்த்திபன் போலீஸாருடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கணவன் மனைவி என்பது தெரிந்தது.

பின்னர் அங்கிருந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுலைமான் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Thanks to

No comments:

Post a Comment