FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, January 22, 2014

செவித்திறன் குறைவுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பேச்சு மொழி பயிற்சி

விருதுநகர் , 22 January 2014
விருதுநகர் மாவட்டத்தில் செவித்திறன் குறைவுடைய சிறுவர், சிறுவர் சிறுமிகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இம்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செவித்திறன் குறைபாடுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பேச்சு மொழி பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டிலும் இப்பயிற்சி மையங்களில் செவித்திறன் குறைவுடையவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்கு 6 மாதம் முதல் மூன்றரை வயதிற்கு உள்பட்ட செவி்த்திறன் குறைவுடைய சிறுவர், சிறுமிகளாக இருக்க வேண்டும். மேலும், இவர்களுக்கு இரண்டு செவிகளில் பொறுத்துவதற்கான செவித்துணை கருவிகளைக் கொண்டு பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி ஆகியவை சிறப்பு உபகரணங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. அதையடுத்து, தொடர்ந்து 6 வயதில் சாதாரண பள்ளியில் சேர்ந்து முதல் வகுப்பு படிப்பதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால், உடனே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தை நேரில் அணுகி, ஆரம்ப கால பயிற்சி மையத்தில் சிறுவர், சிறுமிகளை சேர்த்து பயனடையும்மாறு பொதுமக்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Thanks to

No comments:

Post a Comment