FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 4, 2014

மருத்துவ முகாமில் ஆலோசனை பெற நீண்டநேரம் நிற்பதால் மாற்றுத்திறனாளிகள் அவதி போதிய அளவில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

04.01.2014, தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடக்கும் மருத்துவ முகாமில் ஆலோசனை பெற வரும் மாற்றுத்திறனாளிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க போதிய அளவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றத்திறனாளிகள் அவதி
தர்மபுரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வாரமும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான பரிந்துரைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும்போது டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சமயங்களில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நின்றபடி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இருக்கைகள் அமைக்க கோரிக்கை

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், மருத்துவ ஆலோசனைகளை பெற இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைகள் மற்றும் கால்களில் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகள் டாக்டர்களை சந்திக்க நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும்போது உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் பென்ஞ்சுகளை போதிய அளவில் அமைத்து அவர்களை உட்கார வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களுக்கு வந்த நேரத்தின் அடிப்படையில் டோக்கன் வழங்கினால் அந்த எண் வரிசைப்படி டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற முடியும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Thanks to

No comments:

Post a Comment