FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, January 4, 2014

மருத்துவ முகாமில் ஆலோசனை பெற நீண்டநேரம் நிற்பதால் மாற்றுத்திறனாளிகள் அவதி போதிய அளவில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

04.01.2014, தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடக்கும் மருத்துவ முகாமில் ஆலோசனை பெற வரும் மாற்றுத்திறனாளிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க போதிய அளவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றத்திறனாளிகள் அவதி
தர்மபுரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வாரமும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான பரிந்துரைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும்போது டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சமயங்களில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நின்றபடி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இருக்கைகள் அமைக்க கோரிக்கை

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், மருத்துவ ஆலோசனைகளை பெற இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைகள் மற்றும் கால்களில் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகள் டாக்டர்களை சந்திக்க நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும்போது உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் பென்ஞ்சுகளை போதிய அளவில் அமைத்து அவர்களை உட்கார வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களுக்கு வந்த நேரத்தின் அடிப்படையில் டோக்கன் வழங்கினால் அந்த எண் வரிசைப்படி டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற முடியும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Thanks to

No comments:

Post a Comment