FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, January 4, 2014

மருத்துவ முகாமில் ஆலோசனை பெற நீண்டநேரம் நிற்பதால் மாற்றுத்திறனாளிகள் அவதி போதிய அளவில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

04.01.2014, தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடக்கும் மருத்துவ முகாமில் ஆலோசனை பெற வரும் மாற்றுத்திறனாளிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க போதிய அளவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றத்திறனாளிகள் அவதி
தர்மபுரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வாரமும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான பரிந்துரைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும்போது டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சமயங்களில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நின்றபடி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இருக்கைகள் அமைக்க கோரிக்கை

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், மருத்துவ ஆலோசனைகளை பெற இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைகள் மற்றும் கால்களில் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகள் டாக்டர்களை சந்திக்க நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும்போது உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் பென்ஞ்சுகளை போதிய அளவில் அமைத்து அவர்களை உட்கார வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களுக்கு வந்த நேரத்தின் அடிப்படையில் டோக்கன் வழங்கினால் அந்த எண் வரிசைப்படி டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற முடியும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Thanks to

No comments:

Post a Comment