FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 4, 2014

மருத்துவ முகாமில் ஆலோசனை பெற நீண்டநேரம் நிற்பதால் மாற்றுத்திறனாளிகள் அவதி போதிய அளவில் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

04.01.2014, தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடக்கும் மருத்துவ முகாமில் ஆலோசனை பெற வரும் மாற்றுத்திறனாளிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க போதிய அளவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றத்திறனாளிகள் அவதி
தர்மபுரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வாரமும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான பரிந்துரைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும்போது டாக்டர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சமயங்களில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நின்றபடி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இருக்கைகள் அமைக்க கோரிக்கை

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், மருத்துவ ஆலோசனைகளை பெற இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைகள் மற்றும் கால்களில் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகள் டாக்டர்களை சந்திக்க நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும்போது உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் பென்ஞ்சுகளை போதிய அளவில் அமைத்து அவர்களை உட்கார வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களுக்கு வந்த நேரத்தின் அடிப்படையில் டோக்கன் வழங்கினால் அந்த எண் வரிசைப்படி டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற முடியும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Thanks to

No comments:

Post a Comment