FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, January 9, 2014

பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ்-க்கு கட்டணம்

09.01.2014, சென்னை:
பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் கூறியது:-

தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்ப சலுகைக் கட்டணத்தில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பண்டிகை நாள்கள் மற்றும் சில அரசு விடுமுறை தினங்களின் போது இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை. அந்த நாள்களில் எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் எஸ்.எம்.எஸ். வாயிலாகவே தங்கள் தகவல்களை பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கத்துடன் செயல்படுகிறது என்றால் அரசுத் துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் எஸ்.எம்.எஸ்-க்கு பண்டிகை நாள்களில் கட்டணம் வசூலிக்கின்றது.

இதனைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தவிர கடலூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் 15 இடங்களிóல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment