FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 9, 2014

பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ்-க்கு கட்டணம்

09.01.2014, சென்னை:
பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் கூறியது:-

தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்ப சலுகைக் கட்டணத்தில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பண்டிகை நாள்கள் மற்றும் சில அரசு விடுமுறை தினங்களின் போது இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை. அந்த நாள்களில் எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் எஸ்.எம்.எஸ். வாயிலாகவே தங்கள் தகவல்களை பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கத்துடன் செயல்படுகிறது என்றால் அரசுத் துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் எஸ்.எம்.எஸ்-க்கு பண்டிகை நாள்களில் கட்டணம் வசூலிக்கின்றது.

இதனைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தவிர கடலூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் 15 இடங்களிóல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment