FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 9, 2014

பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ்-க்கு கட்டணம்

09.01.2014, சென்னை:
பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் கூறியது:-

தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்ப சலுகைக் கட்டணத்தில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பண்டிகை நாள்கள் மற்றும் சில அரசு விடுமுறை தினங்களின் போது இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை. அந்த நாள்களில் எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் எஸ்.எம்.எஸ். வாயிலாகவே தங்கள் தகவல்களை பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கத்துடன் செயல்படுகிறது என்றால் அரசுத் துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் எஸ்.எம்.எஸ்-க்கு பண்டிகை நாள்களில் கட்டணம் வசூலிக்கின்றது.

இதனைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தவிர கடலூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் 15 இடங்களிóல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment