FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 9, 2014

பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ்-க்கு கட்டணம்

09.01.2014, சென்னை:
பண்டிகை நாள்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் கூறியது:-

தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்ப சலுகைக் கட்டணத்தில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பண்டிகை நாள்கள் மற்றும் சில அரசு விடுமுறை தினங்களின் போது இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை. அந்த நாள்களில் எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் எஸ்.எம்.எஸ். வாயிலாகவே தங்கள் தகவல்களை பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கத்துடன் செயல்படுகிறது என்றால் அரசுத் துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் எஸ்.எம்.எஸ்-க்கு பண்டிகை நாள்களில் கட்டணம் வசூலிக்கின்றது.

இதனைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தவிர கடலூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் 15 இடங்களிóல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார் அவர்.

Thanks to

No comments:

Post a Comment