FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, May 8, 2016

ஆங்கிலப் படத்தில் அபிநயா

03.05.2016
'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான மாற்றுத் திறனாளி அபிநயா, இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று நடித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 25.

அபிநயா நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் "துடி', "அடிடா மேளம்', "நிசப்தம்', "விழித்திரு'. "துடி', மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படம். "விழித்திரு'வில், அபிநயா ரேடியோ ஜாக்கியாக வருகிறார் .

இந்தியப் படங்களில் நடித்திருந்தாலும், ஆங்கில படத்தில் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. one little finger (ஒரு சிறு விரல்) ஆங்கிலப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை, கொல்கத்தா வரைப் பறந்துபோய், கதை கேட்டு ஓகே சொல்லி, நடித்து முடித்து, அந்தப் பாக்கியையும் சரிசெய்து விட்டார். இந்த ஆண்டு வெளிவரும் இத்திரைப்படம், திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை வாரிக் கொள்ளும் என்று பேச்சு இப்போதே அடிபட ஆரம்பித்துவிட்டது.

'ஞய்ங் கண்ற்ற்ப்ங் ஊண்ய்ஞ்ங்ழ்' படத்தைத் தயாரித்து இயக்குபவர், அகாதெமி விருது பெற்றிருக்கும், கின்னஸ் புக்கில் இடம் பிடித்திருக்கும் இசை அமைப்பாளர் ரூபம் சர்மா. அஸ்ஸôம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கக் குறைவில் சாத்தியங்கள் தான் படத்தின் கதை.

""இனி அபிநயா, தங்கை மாதிரியான சிறு வேடங்களில் நடிக்கமாட்டார்... முழுநீள வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அபிநயா திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுமையுள்ள வேடங்கள் வந்தால் அபிநயா நடிப்பார்'' என்கிறார் அபிநயாவின் தந்தை ஆனந்த்.

அபிநயா மாற்றுத் திறனாளியாக இருப்பதினால்தான், ஞய்ங் ப்ண்ற்ற்ப்ங் ச்ண்ய்ஞ்ங்ழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் பொது நல சேவகராக லீட் ரோலில் நடிக்கும் அபிநயா, போதைப் பொருள்களைக் கடுமையாக எதிர்க்கிறார். அவருடன் 56 மாற்றுத் திறனாளிகள் படத்தில் நடிக்கிறார்கள். அபிநயாவுக்கு ஜோடியாக வருபவர், நிஜ வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆண் மாற்றுத் திறனாளி. படம் அஸ்ஸôமிலும், கொல்கொத்தாவிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஒரு சுமை என்று 38 சதவீதத்தினர் கருதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளிடம் பேசுவது, பழகுவது, அவர்களைப் பராமரிப்பது பற்றி தெரியாததினால் மாற்றுத் திறனாளிகளை ஒதுக்கி விடுகிறோம். இப்படி சொல்பவர்கள் 65 சதவீதம்பேர். மாற்றுத் திறனாளிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்... வயது கூட கூட, உடல் இயலாமை பிரச்னையை நாமும் எதிர் கொள்ள வேண்டிவரும். நமக்கும் பிறர் தயவை நாடும் நிலை வரலாம். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களை மதியுங்கள். யாராவது மாற்றுத் திறனாளி எதிர்பட்டால்... அவருக்கு உதவுங்கள். அவர்களிடம் இரக்கப் பார்வையைக் காட்டாதீர்கள். அன்பு, கனிவு காட்டுங்கள்.. அவர்களும் நம்மைப் போன்ற மனித உயிர்தான்.. படத்தில், இசை மூலம் சிகிச்சை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் படம் மாற்றுத் திறனாளி குறித்த பல கற்பிதங்களுக்கு ஒரு கண் திறப்பாக அமையும்'' என்கிறார் ரூபம் சர்மா.

No comments:

Post a Comment