FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, May 8, 2016

ஆங்கிலப் படத்தில் அபிநயா

03.05.2016
'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான மாற்றுத் திறனாளி அபிநயா, இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று நடித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 25.

அபிநயா நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் "துடி', "அடிடா மேளம்', "நிசப்தம்', "விழித்திரு'. "துடி', மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படம். "விழித்திரு'வில், அபிநயா ரேடியோ ஜாக்கியாக வருகிறார் .

இந்தியப் படங்களில் நடித்திருந்தாலும், ஆங்கில படத்தில் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. one little finger (ஒரு சிறு விரல்) ஆங்கிலப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை, கொல்கத்தா வரைப் பறந்துபோய், கதை கேட்டு ஓகே சொல்லி, நடித்து முடித்து, அந்தப் பாக்கியையும் சரிசெய்து விட்டார். இந்த ஆண்டு வெளிவரும் இத்திரைப்படம், திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை வாரிக் கொள்ளும் என்று பேச்சு இப்போதே அடிபட ஆரம்பித்துவிட்டது.

'ஞய்ங் கண்ற்ற்ப்ங் ஊண்ய்ஞ்ங்ழ்' படத்தைத் தயாரித்து இயக்குபவர், அகாதெமி விருது பெற்றிருக்கும், கின்னஸ் புக்கில் இடம் பிடித்திருக்கும் இசை அமைப்பாளர் ரூபம் சர்மா. அஸ்ஸôம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கக் குறைவில் சாத்தியங்கள் தான் படத்தின் கதை.

""இனி அபிநயா, தங்கை மாதிரியான சிறு வேடங்களில் நடிக்கமாட்டார்... முழுநீள வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அபிநயா திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுமையுள்ள வேடங்கள் வந்தால் அபிநயா நடிப்பார்'' என்கிறார் அபிநயாவின் தந்தை ஆனந்த்.

அபிநயா மாற்றுத் திறனாளியாக இருப்பதினால்தான், ஞய்ங் ப்ண்ற்ற்ப்ங் ச்ண்ய்ஞ்ங்ழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் பொது நல சேவகராக லீட் ரோலில் நடிக்கும் அபிநயா, போதைப் பொருள்களைக் கடுமையாக எதிர்க்கிறார். அவருடன் 56 மாற்றுத் திறனாளிகள் படத்தில் நடிக்கிறார்கள். அபிநயாவுக்கு ஜோடியாக வருபவர், நிஜ வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆண் மாற்றுத் திறனாளி. படம் அஸ்ஸôமிலும், கொல்கொத்தாவிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஒரு சுமை என்று 38 சதவீதத்தினர் கருதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளிடம் பேசுவது, பழகுவது, அவர்களைப் பராமரிப்பது பற்றி தெரியாததினால் மாற்றுத் திறனாளிகளை ஒதுக்கி விடுகிறோம். இப்படி சொல்பவர்கள் 65 சதவீதம்பேர். மாற்றுத் திறனாளிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்... வயது கூட கூட, உடல் இயலாமை பிரச்னையை நாமும் எதிர் கொள்ள வேண்டிவரும். நமக்கும் பிறர் தயவை நாடும் நிலை வரலாம். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களை மதியுங்கள். யாராவது மாற்றுத் திறனாளி எதிர்பட்டால்... அவருக்கு உதவுங்கள். அவர்களிடம் இரக்கப் பார்வையைக் காட்டாதீர்கள். அன்பு, கனிவு காட்டுங்கள்.. அவர்களும் நம்மைப் போன்ற மனித உயிர்தான்.. படத்தில், இசை மூலம் சிகிச்சை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் படம் மாற்றுத் திறனாளி குறித்த பல கற்பிதங்களுக்கு ஒரு கண் திறப்பாக அமையும்'' என்கிறார் ரூபம் சர்மா.

No comments:

Post a Comment