FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, May 8, 2016

ஆங்கிலப் படத்தில் அபிநயா

03.05.2016
'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான மாற்றுத் திறனாளி அபிநயா, இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று நடித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 25.

அபிநயா நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் "துடி', "அடிடா மேளம்', "நிசப்தம்', "விழித்திரு'. "துடி', மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படம். "விழித்திரு'வில், அபிநயா ரேடியோ ஜாக்கியாக வருகிறார் .

இந்தியப் படங்களில் நடித்திருந்தாலும், ஆங்கில படத்தில் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. one little finger (ஒரு சிறு விரல்) ஆங்கிலப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை, கொல்கத்தா வரைப் பறந்துபோய், கதை கேட்டு ஓகே சொல்லி, நடித்து முடித்து, அந்தப் பாக்கியையும் சரிசெய்து விட்டார். இந்த ஆண்டு வெளிவரும் இத்திரைப்படம், திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை வாரிக் கொள்ளும் என்று பேச்சு இப்போதே அடிபட ஆரம்பித்துவிட்டது.

'ஞய்ங் கண்ற்ற்ப்ங் ஊண்ய்ஞ்ங்ழ்' படத்தைத் தயாரித்து இயக்குபவர், அகாதெமி விருது பெற்றிருக்கும், கின்னஸ் புக்கில் இடம் பிடித்திருக்கும் இசை அமைப்பாளர் ரூபம் சர்மா. அஸ்ஸôம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கக் குறைவில் சாத்தியங்கள் தான் படத்தின் கதை.

""இனி அபிநயா, தங்கை மாதிரியான சிறு வேடங்களில் நடிக்கமாட்டார்... முழுநீள வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அபிநயா திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுமையுள்ள வேடங்கள் வந்தால் அபிநயா நடிப்பார்'' என்கிறார் அபிநயாவின் தந்தை ஆனந்த்.

அபிநயா மாற்றுத் திறனாளியாக இருப்பதினால்தான், ஞய்ங் ப்ண்ற்ற்ப்ங் ச்ண்ய்ஞ்ங்ழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் பொது நல சேவகராக லீட் ரோலில் நடிக்கும் அபிநயா, போதைப் பொருள்களைக் கடுமையாக எதிர்க்கிறார். அவருடன் 56 மாற்றுத் திறனாளிகள் படத்தில் நடிக்கிறார்கள். அபிநயாவுக்கு ஜோடியாக வருபவர், நிஜ வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆண் மாற்றுத் திறனாளி. படம் அஸ்ஸôமிலும், கொல்கொத்தாவிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஒரு சுமை என்று 38 சதவீதத்தினர் கருதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளிடம் பேசுவது, பழகுவது, அவர்களைப் பராமரிப்பது பற்றி தெரியாததினால் மாற்றுத் திறனாளிகளை ஒதுக்கி விடுகிறோம். இப்படி சொல்பவர்கள் 65 சதவீதம்பேர். மாற்றுத் திறனாளிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்... வயது கூட கூட, உடல் இயலாமை பிரச்னையை நாமும் எதிர் கொள்ள வேண்டிவரும். நமக்கும் பிறர் தயவை நாடும் நிலை வரலாம். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களை மதியுங்கள். யாராவது மாற்றுத் திறனாளி எதிர்பட்டால்... அவருக்கு உதவுங்கள். அவர்களிடம் இரக்கப் பார்வையைக் காட்டாதீர்கள். அன்பு, கனிவு காட்டுங்கள்.. அவர்களும் நம்மைப் போன்ற மனித உயிர்தான்.. படத்தில், இசை மூலம் சிகிச்சை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் படம் மாற்றுத் திறனாளி குறித்த பல கற்பிதங்களுக்கு ஒரு கண் திறப்பாக அமையும்'' என்கிறார் ரூபம் சர்மா.

No comments:

Post a Comment