FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, May 8, 2016

ஆங்கிலப் படத்தில் அபிநயா

03.05.2016
'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான மாற்றுத் திறனாளி அபிநயா, இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று நடித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 25.

அபிநயா நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் "துடி', "அடிடா மேளம்', "நிசப்தம்', "விழித்திரு'. "துடி', மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படம். "விழித்திரு'வில், அபிநயா ரேடியோ ஜாக்கியாக வருகிறார் .

இந்தியப் படங்களில் நடித்திருந்தாலும், ஆங்கில படத்தில் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. one little finger (ஒரு சிறு விரல்) ஆங்கிலப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை, கொல்கத்தா வரைப் பறந்துபோய், கதை கேட்டு ஓகே சொல்லி, நடித்து முடித்து, அந்தப் பாக்கியையும் சரிசெய்து விட்டார். இந்த ஆண்டு வெளிவரும் இத்திரைப்படம், திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை வாரிக் கொள்ளும் என்று பேச்சு இப்போதே அடிபட ஆரம்பித்துவிட்டது.

'ஞய்ங் கண்ற்ற்ப்ங் ஊண்ய்ஞ்ங்ழ்' படத்தைத் தயாரித்து இயக்குபவர், அகாதெமி விருது பெற்றிருக்கும், கின்னஸ் புக்கில் இடம் பிடித்திருக்கும் இசை அமைப்பாளர் ரூபம் சர்மா. அஸ்ஸôம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கக் குறைவில் சாத்தியங்கள் தான் படத்தின் கதை.

""இனி அபிநயா, தங்கை மாதிரியான சிறு வேடங்களில் நடிக்கமாட்டார்... முழுநீள வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அபிநயா திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுமையுள்ள வேடங்கள் வந்தால் அபிநயா நடிப்பார்'' என்கிறார் அபிநயாவின் தந்தை ஆனந்த்.

அபிநயா மாற்றுத் திறனாளியாக இருப்பதினால்தான், ஞய்ங் ப்ண்ற்ற்ப்ங் ச்ண்ய்ஞ்ங்ழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் பொது நல சேவகராக லீட் ரோலில் நடிக்கும் அபிநயா, போதைப் பொருள்களைக் கடுமையாக எதிர்க்கிறார். அவருடன் 56 மாற்றுத் திறனாளிகள் படத்தில் நடிக்கிறார்கள். அபிநயாவுக்கு ஜோடியாக வருபவர், நிஜ வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆண் மாற்றுத் திறனாளி. படம் அஸ்ஸôமிலும், கொல்கொத்தாவிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் ஒரு சுமை என்று 38 சதவீதத்தினர் கருதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளிடம் பேசுவது, பழகுவது, அவர்களைப் பராமரிப்பது பற்றி தெரியாததினால் மாற்றுத் திறனாளிகளை ஒதுக்கி விடுகிறோம். இப்படி சொல்பவர்கள் 65 சதவீதம்பேர். மாற்றுத் திறனாளிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்... வயது கூட கூட, உடல் இயலாமை பிரச்னையை நாமும் எதிர் கொள்ள வேண்டிவரும். நமக்கும் பிறர் தயவை நாடும் நிலை வரலாம். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவை அன்பு மட்டுமே. அவர்களை மதியுங்கள். யாராவது மாற்றுத் திறனாளி எதிர்பட்டால்... அவருக்கு உதவுங்கள். அவர்களிடம் இரக்கப் பார்வையைக் காட்டாதீர்கள். அன்பு, கனிவு காட்டுங்கள்.. அவர்களும் நம்மைப் போன்ற மனித உயிர்தான்.. படத்தில், இசை மூலம் சிகிச்சை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் படம் மாற்றுத் திறனாளி குறித்த பல கற்பிதங்களுக்கு ஒரு கண் திறப்பாக அமையும்'' என்கிறார் ரூபம் சர்மா.

No comments:

Post a Comment