FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, May 8, 2016

தலையில் கல்லைப் போட்டு மனைவி, மகள் கொலை:DEAF மாற்றுத்திறனாளி கைது

04.05.2016
காட்பாடியில் மனைவி, மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வாய் பேச முடியாத கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்புப் பகுதி கோயில் முன் பகுதியில் உள்ள இடத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பிரகாஷ்(30), தனது மனைவி மீனா (28), 6 வயது மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். இவர் குப்பைகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாவும், அவரது மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களின் அருகே ரத்தக் கறையுடன் நின்ற பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரையும் கொலை செய்ததை பிரகாஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment