FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, May 8, 2016

தலையில் கல்லைப் போட்டு மனைவி, மகள் கொலை:DEAF மாற்றுத்திறனாளி கைது

04.05.2016
காட்பாடியில் மனைவி, மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வாய் பேச முடியாத கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்புப் பகுதி கோயில் முன் பகுதியில் உள்ள இடத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பிரகாஷ்(30), தனது மனைவி மீனா (28), 6 வயது மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். இவர் குப்பைகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாவும், அவரது மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களின் அருகே ரத்தக் கறையுடன் நின்ற பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரையும் கொலை செய்ததை பிரகாஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment