FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, May 8, 2016

தலையில் கல்லைப் போட்டு மனைவி, மகள் கொலை:DEAF மாற்றுத்திறனாளி கைது

04.05.2016
காட்பாடியில் மனைவி, மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வாய் பேச முடியாத கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்புப் பகுதி கோயில் முன் பகுதியில் உள்ள இடத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பிரகாஷ்(30), தனது மனைவி மீனா (28), 6 வயது மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். இவர் குப்பைகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாவும், அவரது மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களின் அருகே ரத்தக் கறையுடன் நின்ற பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரையும் கொலை செய்ததை பிரகாஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment