FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, May 22, 2016

மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை நாடு முழுவதும் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

 புதுடில்லி 18.05.2016
மாநில அரசுகளால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையர்களின் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:
தற்போதுள்ள சட்ட நடைமுறையின்படி, ஒரு மாநில அரசால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், மற்றொரு மாநிலத்தில் செல்லாது. இதனால், பணியிட மாற்றம், திருமணம் உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்ல நேர்ந்தால், அங்கு அரசின் சலுகைகளை தொடர்ந்து பெறுவதில் அவர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், மாநில அரசுகளால் ஒருமுறை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நாடு முழுவதும் அல்லது அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் செல்லத்தக்க வகையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான 2014-ஆம் ஆண்டு சட்டத்தில் புதிய பிரிவு விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதற்கான சட்டமுன்வரைவு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பெயர், முகவரி, அலைபேசி எண், வங்கிக் கணக்கு விவரம், உடலுறுப்பு பாதிப்பின் வகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நவீன அடையாள அட்டை வழங்கும் திட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்பு, மாற்றுத்திறனாளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் நாம் இணையம் வழியாகவே தெரிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கெலாட் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான சட்ட விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

No comments:

Post a Comment