FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, May 15, 2016

கலசலிங்கம் பல்கலை.யில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

10.05.2016, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16 கல்வியாண்டில் 70 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

இயக்குநர் சசி ஆனந்த் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். பிரிவில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு தற்போது வழங்கப்படுகிறது. இவர்களில் 350 பேர் 2 முதல் 4 நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.6.90 லட்சம் கிடைக்கு என்றார்.

விப்ரோ நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் 10-வது இடத்தில் தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தின் மாணவி பத்மஜாவிற்கு, விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை மேலாளர் வில்வநாதன் வெங்கடசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment