FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, May 15, 2016

கலசலிங்கம் பல்கலை.யில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

10.05.2016, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16 கல்வியாண்டில் 70 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

இயக்குநர் சசி ஆனந்த் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். பிரிவில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு தற்போது வழங்கப்படுகிறது. இவர்களில் 350 பேர் 2 முதல் 4 நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.6.90 லட்சம் கிடைக்கு என்றார்.

விப்ரோ நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் 10-வது இடத்தில் தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தின் மாணவி பத்மஜாவிற்கு, விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை மேலாளர் வில்வநாதன் வெங்கடசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment