FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, May 15, 2016

கலசலிங்கம் பல்கலை.யில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

10.05.2016, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16 கல்வியாண்டில் 70 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

இயக்குநர் சசி ஆனந்த் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். பிரிவில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு தற்போது வழங்கப்படுகிறது. இவர்களில் 350 பேர் 2 முதல் 4 நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.6.90 லட்சம் கிடைக்கு என்றார்.

விப்ரோ நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் 10-வது இடத்தில் தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தின் மாணவி பத்மஜாவிற்கு, விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை மேலாளர் வில்வநாதன் வெங்கடசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment