FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, May 15, 2016

கலசலிங்கம் பல்கலை.யில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

10.05.2016, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16 கல்வியாண்டில் 70 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

இயக்குநர் சசி ஆனந்த் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். பிரிவில் (வாய் பேச இயலாத மற்றும் காதுகேளாத பிரிவில்) படிக்கும் 40 மாணவ மாணவியர் உள்ளிட்ட 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு தற்போது வழங்கப்படுகிறது. இவர்களில் 350 பேர் 2 முதல் 4 நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.6.90 லட்சம் கிடைக்கு என்றார்.

விப்ரோ நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் 10-வது இடத்தில் தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தின் மாணவி பத்மஜாவிற்கு, விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை மேலாளர் வில்வநாதன் வெங்கடசுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment