FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, May 26, 2016

சைக்கிள் கடையில் வேலைபார்த்து கொண்டே படித்த காதுகேளாத மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்

26.05.2016
தனது மாமாவின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துத் தேர்வெழுதிய காது கேளாத தருமபுரி மாணவர் மாரியப்பன், காது கேளாத - வாய்ப் பேச இயலாத மாணவர்களில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
தருமபுரியை அடுத்த பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தேர்வெழுதிய இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 90, கணிதம்- 100, அறிவியல்- 90, சமூக அறிவியல்- 95. மொத்தம் 375.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கே.கலா கூறியதாவது: காது கேளாத மாரியப்பனுக்கு எங்கள் ஆசிரியர்கள் சைகையிலேயே பாடம் நடத்திக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எங்களுக்கும் சைகை மொழி சுலபமானது. மாரியப்பனின் தந்தை இறந்து விட்டார். அவரது மாமா நாராயணனின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டுதான் படித்தார்.
பாடம் சொல்லித் தரும்போது சில நேரங்களில் தன்னுடைய இயலாமையை எண்ணிக் கண் கலங்கியிருக்கிறார் என்றார் கலா.
தமிழாசிரியை உதவியுடன் மாணவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மகிழ்ச்சியாக இருக்கிறது; டாக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

No comments:

Post a Comment