FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, May 26, 2016

சைக்கிள் கடையில் வேலைபார்த்து கொண்டே படித்த காதுகேளாத மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்

26.05.2016
தனது மாமாவின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துத் தேர்வெழுதிய காது கேளாத தருமபுரி மாணவர் மாரியப்பன், காது கேளாத - வாய்ப் பேச இயலாத மாணவர்களில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
தருமபுரியை அடுத்த பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தேர்வெழுதிய இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 90, கணிதம்- 100, அறிவியல்- 90, சமூக அறிவியல்- 95. மொத்தம் 375.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கே.கலா கூறியதாவது: காது கேளாத மாரியப்பனுக்கு எங்கள் ஆசிரியர்கள் சைகையிலேயே பாடம் நடத்திக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எங்களுக்கும் சைகை மொழி சுலபமானது. மாரியப்பனின் தந்தை இறந்து விட்டார். அவரது மாமா நாராயணனின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டுதான் படித்தார்.
பாடம் சொல்லித் தரும்போது சில நேரங்களில் தன்னுடைய இயலாமையை எண்ணிக் கண் கலங்கியிருக்கிறார் என்றார் கலா.
தமிழாசிரியை உதவியுடன் மாணவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மகிழ்ச்சியாக இருக்கிறது; டாக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

No comments:

Post a Comment